![]() |
Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes |
Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 11th Tamil |
Subject |
11th Tamil |
Chapter |
Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 11th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு notes PDF.
Download Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF from the links provided in this article.
Question 1.
ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
- “கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்,
- மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்,
- நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்,
- தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
- இதனை ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
கூடுதல் வினாக்கள்
Question 2.
‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய சாமுவேல் பெப்பிசு, ‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
Question 3.
முகலாய மன்னர் கால நாட்குறிப்புப் பற்றி அறியும் செய்திகள் யாவை?
Answer:
முகலாய மன்னர்களுள் பாபர் காலம்முதல், நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்துள்ளது. ஒளரங்கசீப் ஆட்சியின்போது, இம்முறை தடை செய்யப்பட்டது.
Question 4.
நாட்குறிப்பு என்பது யாது? அதன் மூலம் எது?
Answer:
ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையோ, பணிகளையோ பதிவு செய்யும் ஏடு, ‘நாட்குறிப்பு’ எனப்படும். இலத்தீன் மொழியின் மூலச்சொல்லான ‘டைஸ்’ என்பதில் உருவான ‘டைரியம்’ என்பது, ‘டைரி’க்கு மூலச் சொல்லாகும்.
Question 5.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாக எவ்வகையில் திகழ்கிறது?
Answer:
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப் படுத்துகிறது. அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் திகழ்கிறது.
Question 6.
ஆனந்தரங்கர் வாழ்வில் உயர்வு பெற்றதை விளக்குக.
Answer:
உழைப்பு, உண்மை , உறுதிமிக்க ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர் ‘துய்ப்ளே ‘யின் காலத்தில் தலைமைத் ‘துவிபாஷி’யாகப் பணியாற்றினார். பிரெஞ்சு ஆட்சியரின் நம்பிக்கைக்கு உரியவராகவும், அரசியல் செல்வாக்கு மிக்கவராகவும் ஆனந்தரங்கர் திகழ்ந்தது, வாழ்வில் பெற்ற உயர்வாகும்.
Question 7.
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் எவற்றைப் பதிவு செய்துள்ளார்?
Answer:
தமிழ்நாட்டுப் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கைகள் முதலான கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைத் தம் நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.
Question 8.
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்விற்கும் எவ்வெவற்றைக் குறிப்பிட்டார்?
Answer:
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டபின் செய்திகளை எழுதியுள்ளார்.
Question 9.
ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ.வே.சா. கூறிய கருத்து யாது?
Answer:
“நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் தமிழ்த்தாய் பாதிக்கப்பட்டாலும், அவளுடைய ஆபரணங்கள், தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்று, உ.வே.சா., ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்துக் கூறியுள்ளார்.
Question 10.
மகாகவி பாரதியார் ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்துக் கூறியுள்ள செய்தி யாது?
Answer:
“அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்” என்று, ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து, மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.
Question 11.
உ.வே.சா. பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
Answer:
மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்றான பயர்நிலைக் கல்விமுறையில் உ.வே.சா. பயின்றார். இக்கல்விமுறை, தனிநிலையில் புலவாரிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்னும் வகைமைக்குள் அடங்கும்.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம், உ.வே.சா. பயின்ற கல்விமுறை இம்முறையாகும்.
சிறுவினா
Question 1.
ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.
Answer:
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பில், அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
- பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது,
- பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது,
- சினமுற்ற ஆற்காடு நவாபு, தம் மூத்த மகனை அனுப்பிப் பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டது.
- தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்,
- புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப் எல் வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு
- உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்க, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்.
கூடுதல் வினாக்கள்
Question 2.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் சிறப்பு யாது?
Answer:
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, பன்னிரண்டு தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
- ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரே, செய்திகளை எழுதியுள்ளார்.
- ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பே, இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும். ஆனந்தரங்கர் நாட்குறிப்புகள், தென்னிந்தியாவின் 25 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
- சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழ்கின்றன.
Question 3.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகளில் இடம் பெற்ற செய்திகளை விவரிக்கவும்.
Answer:
புதுச்சேரியை ஆங்கிலேயர் முற்றுகை இட்டதையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் ஆனந்தரங்கரின் இறுதிக் கால நாட்குறிப்புகள் பேசுகின்றன. புதுச்சேரியைத் தாக்க 1760 பிப்ரவரியில் ஆங்கிலக் கப்பல்கள் வந்தன.
செஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை வென்ற ஆங்கிலத் தளபதி புதுச்சேரியில் நெருங்கியது, ஆங்கிலப் படைகள் சாரம்வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தது, புதுச்சேரியில் பீதி நிலவும் வகையில் குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்தது,
தேவனாம் பட்டணத்தில் மேலும் மேலும் ஆங்கிலத் துருப்புகள் கப்பலில் வந்து இறங்கியது, புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர் கைப்பற்றியது என்னும் செய்திகளை எல்லாம் தம் குறிப்பேட்டில் ஆனந்தரங்கர் எழுதிவைத்துள்ளார். இவை இறுதிக்கால நாட்குறிப்புகளாகும்.
Question 4.
ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
- ‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர், ‘சாமுவேல் பொரிய ஆவார்.
- இவர் ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றியவர். இரண்டாம் சார்லஸ் மைனர் காலத்து நிகழ்வுகளை இவர் நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இதுவே முதல் நாட்குறிப்பு.
- இவரைப் போல் ஆனந்தரங்கரும் தம் கால நிகழ்வுகளை, நாட்குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இந்நாட் குறிப்பு, இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
- எனவே, ஆனந்தரங்கர், இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுகிறார்.
நெடுவினா
Question 1.
“தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்” என்பதை நிறுவுக.
Answer:
காலப்பெட்டகமான நாட்குறிப்பு :
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதாகவும், அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் வரலாற்றுப் பேழையாகவும் உள்ளது. அந்த நாட்குறிப்பு நிகழ்வு, நடைபெற்ற ஆண்டு, மாதம், நாள், கிழமையோடு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
அரசியல் நிகழ்வுகள் :
அக்காலத்தில் நாணயம் அச்சடிக்க உரிமை பெற்றது. பிரெஞ்சு – ஆங்கிலப்படைகள் தங்களுக்கு இடையே நாடு பிடிக்கப்பட்டது. ஆற்காடு நவாபின் செயல்பாடுகள் முதலான அரசியல் நிகழ்வுகளையும் நாட்குறிப்பில் பதித்துள்ளார். 18ஆம் வற்றாண்டில் தமிழகத்தின் சமூகத்தில் நிலவிய பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கை முதலான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பைப் பதிவு செய்வாளர்.
சமுதாய செய்தி
நீதி வழங்குதல், பல்வேறு காரணங்களுக்காக மரணதண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய அக்காலச் செயல்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வீடுகளில் திருடியவர்களைப் படித்துத் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கிலிட்டது.
ஒருவருக்குக் காதறுத்து, ஐம்பது கசையடி கொடுத்தது ஆகியவற்றை எழுதியுள்ளார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணிகர் பலர்மூலம் கடல் வணக்கம் செய்ததைத் தெளிவுபட எழுதியுள்ளார். ஐரோப்பியக் கப்பல்கள் ஆறு மாதம் பயணம் செய்து புது வந்ததும், பீரங்கி முழங்கி வரவேற்றதையும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பால் அறியமுடிகிறது.
வர்த்தகச் செய்தி :
துணி வர்த்தகம் செய்த முறை, புதுச்சேரியில் நாணயம் அச்சிட்ட செய்தி, 1742இல் வீசிய பெருங்காற்று, அதனால் மக்கள் பெற்ற துயர், வாடிய மக்களுக்கு ஒழுகரை கனகராயர் பெருஞ்சோறு அளித்தது, 1745இல் கப்பல் வருகை இன்மையால் புதுவையில் ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடு, அதை நீக்க லெபூர் தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தது, மக்கள் அடைந்த மகிழ்ச்சி என, அனைத்தையும் பதித்துள்ளார். இவற்றை எல்லாம் நோக்கத் தம் நாட்குறிப்பை ஆனந்தரங்கர், தாம் வாழ்ந்த காலத்தின் (நாகரிகப் புதையலாகப் பயன்பட வைத்துள்ளமை புலப்படும்.
பலவுள் தெரிக
Question 1.
பொருந்தாததைத் தேர்க.
அ) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள், பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம்
இ) ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார். ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள்கள் தேவைப்பட்டன.
i) அ, ஆ
ii) ஆ, இ
iii) அ, இ
iv) ஆ, ஈ
Answer:
iv) ஆ, ஈ
Question 2.
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
அ) மொழிபெயர்ப்பாளர்
ஆ) இந்தியாவின் பெப்பிசு
இ) தலைமைத் துவிபாஷி
ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
Answer:
ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
கூடுதல் வினாக்கள்
Question 3.
18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ளக் கிடைத்த அரிய பெட்டகம் ………………………
அ) துய்ப்ளே நாட்குறிப்பு
ஆ) வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
இ) சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
ஈ) அனந்தரங்கர் நாட்குறிப்பு
Answer:
ஈ) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
Question 4.
நாட்குறிப்பை ஆங்கிலத்தில் ………………………என அழையர்)
அ) டைஸ்
ஆ) டைரியம்
இ) டைரி
ஈ) எபிமரிடிஸ்
Answer:
இ) டைரி
Question 5.
நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழும் ‘EPHEMERIDES’ என்பது ………………………
அ) ஆங்கிலக் குறிப்பேடு
ஆ) இலத்தீன் குறிப்பேடு
இ) கிரேக்கக் குறிப்பேடு,
ஈ) பிரெஞ்சுக் குறிப்பேடு
Answer:
இ) கிரேக்கக் குறிப்பேடு
Question 6.
‘EPHEMERIDES’ ஏன் தகு, ………………………என்பது பொருள்.
அ) ஒரு மாதத்துக்கான முடிவு
ஆ) ஒரு நாளுக்கான முடிவு
இ) வரலாறு
ஈ) ஓர் ஆண்டுக்கான முடிவு
Answer:
ஆ) ஒரு நாளுக்கான முடிவு
Question 7.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை………………………
அ) சாமுவேல் பெப்பிசு
ஆ) கீட்ஸ்
இ) ஜான்ரஸ்கின்
ஈ) ஜி. யு. போப்
Answer:
அ) சாமுவேல் பெப்பிசு
Question 8.
முகலாய மன்னர்களிடையே நாட்குறிப்பு எழுதும் வழக்கம், ………………………காலம்முதல் வழக்கத்தில் இருந்தது.
அ) அக்பர்
ஆ) ஔரங்கசீப்
இ) பாபர்
ஈ) சலீம்
Answer:
இ) பாபர்
Question 9.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, தென்னிந்தியாவின் ………………………ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) இருபத்தைந்து
ஈ) முப்பது
Answer:
இ) இருபத்தைந்து
Question 10.
ஆனந்தரங்கர், தமிழில் எழுதிய நாட்குறிப்பு,………………………தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
அ) பத்து
ஆ) இருபத்தைந்து
இ) பன்னிரண்டு
ஈ) பதினெட்டு
Answer:
இ) பன்னிரண்டு
Question 11.
சென்னைக் கோட்டையை 1758இல் முற்றுகையிட்டுத் தாக்கியது ………………………
அ) துய்ப்ளே
ஆ) மகபூஸ்கான்
இ) லல்லி
ஈ) லெபூர்தொனே
Answer:
இ) லல்லி
Question 12.
1758இல் சென்னைக் கோட்டையின் கவர்னராக இருந்தவர்………………………
அ) இராபர்ட் கிளைவ்
ஆ) துய்ப்ளே
இ) மன்றோ
ஈ) மேஸ்தர்பிகட்
Answer:
ஈ) மேஸ்தர்பிகட்
Question 13.
புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன், ……………………… பணியாற்றினார்.
அ) ஆளுநராக
ஆ) பணியாளாக
இ) மாலுமியாக
ஈ) எடுபிடியாக
Answer:
இ) மாலுமியாக
Question 14.
ஐரோப்பாவிலிருந்து கப்பல்கள் இந்தியாவை அடைய, ……………………… திங்கள்களானது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
இ) ஆறு
Question 15.
நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பெற்றது ………………………
அ) ஆங்கில அரசு
ஆ) பிரெஞ்சு அரசு
இ) ஆங்கில வணிகக்கழகம்
ஈ) பிரெஞ்சு வணிகக்கழகா
Answer:
ஈ) பிரெஞ்சு வணிகக்கழகம்
Question 16.
வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம் ………………………
அ) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கழகம்
ஆ) போர்ச்சுகீசியக் கிழக்கிந்தியக் கழகம்
இ) டச்சுக் கிழக்கிந்தியக் கழகம்
ஈ) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம்
Answer:
ஈ) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம்
Question 17.
புதுச்சேரியில் எட்டு மாற்றுக்குக் குறைவாக வராக நாணயங்களை வைத்திருப்பது, தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது ………………………
அ) ஆங்கில மன்னர்
ஆ) ஆற்காட்டு நவாப்
இ) பிரெஞ்சு மன்னர்
ஈ) புதுவை கவர்னர்
Answer:
இ) பிரெஞ்சு மன்னர்
Question 18.
நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது ………………………காலத்தில்.
அ) பாபர் ஆட்சி
ஆ) ஔரங்கசீப் ஆட்சி
இ) பிரெஞ்சு ஆட்சி
ஈ) ஆங்கில ஆட்சி
Answer:
ஆ) ஔரங்கசீப் ஆட்சி
Question 19.
இந்தியாவுக்குக் கடல் வாயைக் கண்டுபிடித்த மாலுமி வாஸ்கோடகாமா, ………………………மாலுமி.
அ) முகலாய
ஆ) ஆங்கிலேய
இ) போர்ச்சுக்கீசிய
ஈ) பிரெஞ்சு
Answer:
இ) போர்சுகசிய
Question 20.
பிரெஞ்சு அரசுபற்றி அறிய உதவும் வரலாற்றுக் கருவூல ஆவணமாக இருப்பது ………………………
அ) வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
ஆ) சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
இ) அனந்தரங்கர் நாட்குறிப்பு
ஈ) பாபர் நாட்குறிப்பு
Answer:
இ) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
Question 21.
ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர்………………………காலத்தில், தலைமைத் துவிபாஷியாகப் பணியாற்றினார்.
அ) கியோம் ஆந்த்ரே
ஆ) பிரான்சுவா மர்த்தேன்
இ) துய்ப்ளே
ஈ) லெபூர்தொனே
Answer:
இ) துய்ப்ளே
Question 22.
ஆனந்தரங்கரைப் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக் கிடங்குத் தலைவராக நியமித்தவர்………………………
அ) கியோம் ஆந்த்ரே
ஆ) அலனுவார்
இ) துய்ப்ளே
ஈ) லெபூர்தொனே
Answer:
ஆ) அலனுவார்
Question 23.
நாணய அச்சடிப்பு உரிமை பெற்ற பிரெஞ்சு ஆளுநர் ………………………
அ) துய்ப்ளே
ஆ) அலனுவார்
இ) லெபூர்தொனே
ஈ) டூமாஸ்
Answer:
ஈ) டூமாஸ்
Question 24.
புதுச்சேரியைப் பெருங்காற்றுச் சூறையாடிய ஆண்டு ………………………
அ) 1736
ஆ) 1993
இ) 1745
ஈ) 1717
Answer:
இ) 1745
Question 25.
புதுவையைக் காப்பாற்ற ஆங்கிலேயக் கப்பல்கள், துருப்புகளை மேலும் மேலும் இறக்கிய இடம்………………………
அ) செஞ்சி
ஆ) சாரம்
இ) தேவனாம்பட்டணம்
ஈ) புதுவை
Answer:
இ) தேவனாம்பட்டணம்
Question 26.
செய்திகளை ஒன்று தவறாமல் சித்திரகுப்தனைப்போல் ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார் எனக் குறிப்பிட்டவர் ………………………
அ) திருவேங்கடம்
ஆ) நைனியப்பர்
இ) ஆளுநர் துய்ப்ளே
ஈ) மகாகவி பாதியார்
Answer:
ஈ) மகாகவி பாரதியார்
Question 27.
புதுச்சேரியிலிருந்து மணிலா சென்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியவர் ………………………9/8+6
அ) திருவேங்கடம்
ஆ) கனகராயர்
இ) அழகப்பன்
ஈ) தைனயப்பர்
Answer:
இ) அழகப்பன்
Question 28.
‘இந்தியாவின் பெப்பிசு’ என்று அழைக்கப்படுபவர்
அ) சாமுவேல்
ஆ) ஆனந்தரங்கர்
இ) துய்ப்ளே
ஈ) இராபர்ட் கிளைவு
Answer:
ஆ) ஆனந்தரங்கர்
Question 29.
கீழ்க்காண்பவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் – எழுதியோர்
அ) ஆனந்தரங்கர் கோவை
ஆ) ஆனந்தரங்கர் பலளைத்தமிழ்
இ) வானம் வசப்படும்
1. புலவரேறு அரிமதி தென்னகன்
2. பிரபஞ்சன்
3. தியாகராய தேசிகர்
4. சாமுவேல் பெப்சு
1. அ – 1, ஆ – 2, இ – 4
2. அ – 3, ஆ – 1, இ – 2
3. அ – 4, ஆ – 3, இ – 2
4. அ – 3, ஆ – 4, இ – 1
Answer:
2. அ – 3, ஆ – 1, இ – 2
விடைக்கேற்ற வினா அமைக்க.
1. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் 12 தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
வினா : ஆனந்தரங்கத்திய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாகத் ஆனந்தரங்கர் எழுதிய
நாட்குறிப்புகள் வெளிவந்துள்ளன?
2. உலக நாட்குறிப்பு இயக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர், சாமுவேல் பெப்பிசு ஆவார்.
வினா : உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
3. பண்பாடு, யம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்விகளை, ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.
வினா – ஆனந்தரங்கர் எவ்வெக் கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்?
4. ஆகரந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
வினா : ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி எச்செய்திகளையே விவரித்துள்ளது?
5. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம்.
வினா : பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம் எவரைப் பங்குதாரராகக் கொண்டு கூட்டு நிறுவனம்?
6. நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது.
வினா : புதுச்சேரியில் பிரெஞ்சு வணிகக் கழகம் நிஜாமிடமிருந்து எவ்வுரிமையைப் பெற்றது?
7. மாலைப்பொழுதில் வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது.
வினா : எப்பொழுது வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது எது?
8. புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை தடைப்பட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது.
வினா : எவற்றின் வருகைத் தடைப்பட்டுப் புதுச்சேரிக்குப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது?
How to Prepare using Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 11th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 11th Tamil Chapter 1.1 யுகத்தின் பாடல் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 1.1 யுகத்தின் பாடல் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 1.3 நன்னூல் பாயிரம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 1.3 நன்னூல் பாயிரம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 1.4 ஆறாம் திணை Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 1.4 ஆறாம் திணை Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.1 இயற்கை வேளாண்மை Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.1 இயற்கை வேளாண்மை Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.2 ஏதிலிக்குருவிகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.2 ஏதிலிக்குருவிகள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.3 காவியம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.3 காவியம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.5 ஐங்குறுநூறு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.5 ஐங்குறுநூறு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.6 யானை டாக்டர் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.6 யானை டாக்டர் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 2.7 புணர்ச்சிவிதிகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 2.7 புணர்ச்சிவிதிகள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.2 காவடிச்சிந்து Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.2 காவடிச்சிந்து Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.3 குறுந்தொகை Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.3 குறுந்தொகை Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.5 வாடிவாசல் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.5 வாடிவாசல் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.6 பகுபத உறுப்புகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.6 பகுபத உறுப்புகள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 3.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 3.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 4.2 பிள்ளைக்கூடம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.2 பிள்ளைக்கூடம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 4.3 நற்றிணை Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.3 நற்றிணை Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 4.4 தொல்காப்பியம் – சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.4 தொல்காப்பியம் – சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 4.5 இதழாளர் பாரதி Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.5 இதழாளர் பாரதி Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 5.2 சீறாப்புராணம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.2 சீறாப்புராணம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 5.3 அகநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.3 அகநானூறு Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 5.4 பிம்பம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.4 பிம்பம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 5.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 5.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 6.1 காலத்தை வென்ற கலை Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 6.1 காலத்தை வென்ற கலை Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 6.4 திருச்சாழல் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 6.4 திருச்சாழல் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 7.2 புரட்சிக்கவி Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.2 புரட்சிக்கவி Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 7.3 பதிற்றுப்பத்து Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.3 பதிற்றுப்பத்து Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.4 சிந்தனைப் பட்டிமன்றம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 8.1 தாகூரின் கடிதங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.1 தாகூரின் கடிதங்கள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 8.3 தொலைந்து போனவர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.3 தொலைந்து போனவர்கள் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 8.4 மனோன்மணீயம் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.4 மனோன்மணீயம் Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 8.5 செவ்வி Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.5 செவ்வி Notes
- Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes
0 comments:
Post a Comment