Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Tuesday, September 28, 2021

Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes

Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes
Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes


Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 12th History

Subject

12th History

Chapter

Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 12th History Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் notes PDF.

Download Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF from the links provided in this article.


I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
அ) திலகர்
ஆ) கோகலே
இ) W.C. பானர்ஜி
ஈ) M.G. ரானடே
Answer:
ஆ) கோகலே

Question 2.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்
அ) கேதா
ஆ) தண்டி
இ) சம்பரான்
ஈ) பர்தோலி
Answer:
இ) சம்பரான்

Question 3.
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
அ) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை
ஆ) சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை
ஈ) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.
Answer:
இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.

Question 4.
இந்தியாவின் மூவர்ணக்கொடி எப்போது ஏற்றப்பட்டது?
அ) டிசம்பர் 31, 1929
ஆ) மார்ச் 12, 1930
இ) ஜனவரி 26, 1930
ஈ) ஜனவரி 26, 1931
Answer:
அ) டிசம்பர் 31, 1929

Question 5.
1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?
அ) சுயராஜ்யக் கட்சி
ஆ) கதார் கட்சி
இ) சுதந்திராக் கட்சி
ஈ) கம்யூனிஸ்ட் கட்சி
Answer:
அ) சுயராஜ்யக் கட்சி

Question 6.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. நாமசூத்ரா இயக்கம் – 1. வடமேற்கு இந்தியா
ஆ. ஆதிதர்ம இயக்கம் – 2 (தென்னிந்தியா
இ. சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா
ஈ. திராவிட இயக்கம் – 4 மேற்கு இந்தியா

Answer:
அ) 3 1 4 2

Question 7.
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.

  1. அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
  2. நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  3. சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
  4. கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

அ) 2 1 4 3
ஆ) 1,3,2,4
இ) 2,4,1,3
ஈ) 3,2,4,1
Answer:
அ) 2 1 4 3

Question 8.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
அ) பஞ்சாப் துணை ஆளுநர் – 1. ரெஜினால்டு டையர்
ஆ) தலித் – பகுஜன் இயக்கம் – 2. டாக்டர். அம்பேத்கர்
இ) சுயமரியாதை இயக்கம் – 3. ஈ.வெ.ரா. பெரியார்
ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்
Answer:
ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்

Question 9.
பின்வரும் நிகழ்வுகளைச் சரியான காலவரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
i) கேதா சத்தியாகிரகம்
ii) சம்பரான் இயக்கம்
iii) பிராமணரல்லாதார் இயக்கம்
iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
அ) ii, iii, i, iv
ஆ) iii, ii, i, iv
இ) ii, i, iv, iii
ஈ) ii, i, iii, iv
Answer:
ஈ) ii, i, iii, iv

Question 10.
பின்வருவனவற்றுள் எது, எவை சரியானவை அல்ல.
i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
iv) இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
அ) iமட்டும்
ஆ) 1 மற்றும் iv|
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
Answer:
ஈ) iii மட்டும்

Question 11.
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை.
அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்
ஆ) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல்
இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல்
ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
அ) அ மற்றும் ஆ
ஆ) ஆ மற்றும் இ
இ) அ மற்றும் ஈ ‘
ஈ) இ மற்றும் ஈ
Answer:
அ) அ மற்றும் ஆ

Question 12.
கூற்று : பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம் : அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை வளக்கவில்லை
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
Answer:
இ) கூ சரி, காரணம் தவறு.

Question 13.
கூற்று : 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம் : இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 14.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
அ) ராஜாஜி
ஆ) சித்தரஞ்சன் தாஸ்
இ) மோதிலால் நேரு
ஈ) சத்யமூர்த்தி
Answer:
அ) ராஜாஜி

Question 15.
காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு
அ) ஏப்ரல் 6, 1930
ஆ) மார்ச் 6, 1930
இ ) ஏப்ரல் 4, 1939
ஈ) மார்ச் 4, 1930
Answer:
அ) ஏப்ரல் 6, 1930

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
Answer:

  • இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
  • இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.

Question 2.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
Answer:
ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.

Question 3.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
Answer:

  • பல்வேறு சாதி, பிரதேசங்கள், மதங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க “இந்திய பணியாளர் சங்கத்தை” 1905ல் கோபால கிருஷ்ண கோகலே நிறுவினார்.
  • நிவாரணப்பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இதர சமூகக் கடமைகளில் உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

Question 4.
பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக. (மார்ச் 2020)
Answer:
பகிஷ்கிரித் ஹிதகர்னி :

  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. நம்
  • இது தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பாகும்.
  • இதன் மூலம் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன் ஆ குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார்.

Question 5.
தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
Answer:

  • மத்திய சட்டப் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
  • இச்சட்டம் “எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது”.
  • இதனை காந்தியடிகளும் மற்ற தேசியவாதிகள் அனைவரும் எதிர்த்தனர்.

Question 6.
பி.ஆர். அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?
Answer:
மஹத் சத்தியாக்கிரகம்:

  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

Question 7.
காந்தி – இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது?
Answer:
1931 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்தி விடுதலை செய்யப்பட்டவுடன் ஆங்கில அரசப் பிரதிநிதி இர்வின், காந்திஜியை அழைத்துப் பேசினார். இதன் விளைவாக காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. சத்தியாகிரகம் கைவிடப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு இசைந்தது.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
Answer:

  • 1919 ஏப்ரல் 13-இல். அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
  • சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக்களத்தில் குழுமியிருந்தனர்.
  • பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர்.
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்திற்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்தது. அங்கு சிக்கிக் கொண்ட மக்களைக் குறி வைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
  • அரசு தகவல்களின்படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்த போதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும்.
  • ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.

Question 2.
மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.
Answer:

  • 1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அரசின் ஒவ்வொரு துறையிலும் அதிக இந்தியர்களைச் சேர்த்தது.
  • படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கும் நோக்கத்துடன் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியது.
  • மாநில அதிகாரங்கள் மாற்றப்பட்ட துறைகள், ஒதுக்கப்பட்ட துறைகள் எனப் பிரிக்கப்பட்டன.

Question 3.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது? (மார்ச் 2020 )
Answer:

  • 1932 செப்டம்பரில் தாழ்த்தப்பட்ட இனத் தலைவரான டாக்டர் அம்பேத்காரும், காந்திஜியும் பூனாவில் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இதுவே பூனா ஒப்பந்தம் எனப்படுகிறது.
  • இதன்படி இந்துக்கள் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட ஒப்புக் கொண்டனர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

Question 4.
பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்ககால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.
Answer:

  • இந்தியாவின் கீழ்த்தட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்ற தேசியவாதிகளால் கூறிய தாராளமய ஜனநாயக கருத்துக்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
  • சுயமரியாதை இயக்கம், சமூகநீதி சார்ந்து அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள், பகுஜன் இயக்கம் செயல்பட்டன.
  • இதனை தீவிர தன்மையுடன் அடிப்படை மாற்றம் விழைவோர் இந்த இயக்கங்களை எதிர்த்தனர்.
  • பிரிட்டிஷார், தேசவிரோத சக்திகள் போன்றவற்றிற்கு கைத்தடிகள் என்று இந்த இயக்கங்களைச் சிலர் குறிப்பிட்டனர்.
  • காலனி அரசுக்கு எதிராகப் பூர்வாங்க தேசியவாதத் தலைவர்கள் எந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்தினார்களோ அதே மாதிரியான உத்தியைப் பிராமணர் அல்லாத இயக்கத்தின் பூர்வாங்கத் தலைவர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

Question 5.
மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் – வேறுபடுத்துக.
Answer:
மாற்றத்தை விரும்புபவர்கள் :

  • சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தீவிர அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்றும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்றும் விரும்பினார்கள்.
  • சீர்த்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
  • இக்குழு சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் என அழைக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தியும் இணைந்தார்.

மாற்றத்தை விரும்பாதவர்கள் :

  • சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்திய வழியை பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
  • இந்த குழுவுக்கு இராஜகோபாலாச்சாரி, வல்லபாய் படேல், இராசேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர். எந்த மாற்றா கா என்று இந்த அணி வலியுறுத்தியது.

Question 6.
பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
Answer:

  • இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் போது காந்தியடிகள் மற்றும் அம்பேத்கார் இடையே தனித் தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுக்கள் தோல்வி அடைந்தன.
  • பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்க, 1932 ஆகஸ்டில் வகுப்பு வாரித் 1 தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அம்பேத்காரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

Question 7.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப்பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
Answer:

  • வட்டமேசை மாநாடுகளுக்குப் பிற பல போராட்டங்கள் நடைபெற்றன. 1940 காங்கிரஸ் தனிநபர் அறப்போரை அறிவித்தது.
  • 1942ல் இந்திய ராணுவ வீரர்களின் ஆதரவை பெரும்பொருட்டு கிரிப்ஸ் தூதுக்குழு ஒன்று வந்தன.
  • கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையில் டொமினியன் அந்தஸ்து மற்றும் பாகிஸ்தான் பற்றிய செய்தி இடம் பெறாததால் காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை ஏற்கவில்லை.
  • 1942 காங்கிரஸ் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் துவங்கியது.
  • காந்தியினுடைய கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
  • காந்திஜியும் பிறதலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் சட்ட விரோதமான இயக்கம் என்று தடை செய்யப்பட்டது.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி. (மார்ச் 2020)
Answer:

  • கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
  • பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன.
  • தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
  • வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களை இந்தப் போராட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
  • மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு ஒரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
  • இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.

Question 2.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்டமறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
Answer:
ஒத்துழையாமை இயக்கம்:

  • 1920 ஆம் ஆண்டு சாத்வீக முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி தொடங்கினார். இதன்படி மக்கள் பதவிகளை துறக்க வேண்டும்.
  • வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிகளை தவிர்க்க வேண்டும்.
  • பட்டதாரிகள் பட்டங்களை துறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தின் செயலாக்கம்:

  • அயல் நாட்டு துணிகள் எரிக்கப்பட்டன.
  • நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டன.
  • ஆங்கில அரசால் வழங்கப்பட்ட பட்டங்களையும் கௌரவப் விருதுகளையும் மக்கள் தூக்கி எறிந்தனர்.

சட்டமறுப்பு இயக்கம் :

  • ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து இது மாறுபட்டதாக இருந்தது.
  • சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க ஆங்கிலேய ஆட்சியாளர் முடிவு செய்தனர்.
  • இதனை எதிர்த்து சட்டமறுப்பு போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். எ.கா. உப்பு வரி, இயற்கையாக கிடைக்கும் கடல் நீரை காய்ச்சி எடுக்கும் உப்பு உற்பத்தியில் ஆங்கிலேய அரசின் ஏகபோக உரிமை மற்றும் உப்பின் மீது விதித்த வரி ஆகியவற்றை காந்தி எதிர்த்தார்.
  • அரசின் கொள்கைகளை எதிர்க்க சட்டமறுப்பியக்கம் மேற்கொள்ளப்பட்டது.
  • இதன்படி 1930, ஏப்ரல் மாதத்தில் காந்திஜி தலைமையில் தண்டியாத்திரையும் தமிழ்நாட்டில் ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யம் யாத்திரையும் அடைந்து ஆங்கிலேய உப்பு வரி சட்டத்தை மீறினர்.

Question 3.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
Answer:
காந்தியின் பங்கு :
இந்திய விடுதலைப் போரில் மூன்றாவது கட்டம் பொருத்தமாகக் காந்தி ஊழி அல்லது சகாபதம் என அழைக்கப்படுகிறது.

மக்கள் இயக்கமாக மாற்றுதல் :

  • மகாத்மா காந்தி தேசிய இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்.
  • அவர் எளிய மனிதர். அவருடைய செயலாற்றும் முறை நடைமுறை வாழ்க்கையில் மற்ற மக்களைத் தன்னைப் பின்பற்றும்படிச் செய்தார்.

இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கும் பாடுபடுதல் :

  • இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட அவர் கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்.
  • இவை இரண்டையுைம் நம் நாட்டுக்கே உரித்தாக்கினார்.
  • காந்திஜி தன்னுடைய குறிக்கோள்கள் வெற்றியடையப் பட்டினி அறப்போரைக் கடைப்பிடித்த வரியா வெற்றிகளை அடைந்தார்.

அறப்போர் மூலம் வெற்றி:

  • மக்கள் பயன்படுத்தும் மிகச் சாதாரணமான பொருளாகிய உப்புக் கூட அவருக்கு வலியைப் அரசியல் ஆயுதமாயிற்று.
  • அவருடைய உப்பு அறப்போரின் மூலம் அவர் உலகத்திற்கு ஓர் உண்மையை நிரூபித்தார்.

மக்களின் உண்மையான பிரதிநிதி:

  • காந்தி – இர்வின் ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் இந்திய தேசிய இயக்கத்தில் மற்ற ஆகும் இந்தியப் பாமர மக்களின் உண்மையான பிரதிநிதி என்று அவர் கருதப்பட்டார்.
  • சர்ச்சில் அவரை அரை ஆடை அணிந்த பக்கிரி’ என்று செய்த கேலி எடுபடவில்லை.

சமுதாயச் சீர்திருத்தம் :
உலகின் எந்த வல்லமைச் சக்தியும் எவ்வளவு முறை சிறையில் வைத்தும் அவருடைய தீர்க்கமான முடிவுகளை அசைக்க முடியவில்லை. அவர் இந்தியப் பெண்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார். தீண்டாமையை ஒழிக்க அரும்பாடுப்பட்டார்.

Question 4.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப் பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
Answer:
ஆரம்ப கல்வி :

  • எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912-இல் பட்டதாரி ஆனார்.
  • பரோடா அரசரின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்ட மேற்படிப்புப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
  • சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அவர் லண்டன் சென்றார்.
  • 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
  • இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.’
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
  • இடஒதுக்கீடு பெறப்பட்ட இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தால் அவர்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • வாய் பேச முடியாதவர்களின் தலைவர் (மூக் நாயக்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும், தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு (பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அவர் தொடங்கினார்.
  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர “மஹத் சத்தியாகிரகம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
காந்தியடிகளின் சகாப்தம் குறித்த நிகழ்வுகளின் காலக்கோடு ஒன்றை உருவாக்கவும்.
Answer:

2. தற்போதைய சமூக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் காந்தியடிகளின் இணக்கத்தை விவாதம் செய்.

12th History Guide காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர் …………..
அ) திலகர்
ஆ) தாகூர்
இ)கோபாலகிருஷ்ண கோகலே
ஈ) மகாத்மா காந்தி
Answer:
ஆ) தாகூர்

Question 2.
இந்திய பணியாளர் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு ……………..
அ) 1902
ஆ) 1905
இ) 1908
ஈ) 1907
Answer:
ஆ) 1905

Question 3.
அரசின் பஞ்சகால விதியின் படி, பயிர்சாகுபடி சராசரியாக – சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழுநிலவரி ரத்துக்கு தகுதி பெறுவர்.
அ) 15 சதவீதம்
ஆ) 25 சதவீதம்
இ) 35 சதவீதம்
ஈ) 20 சதவீதம்
Answer:
ஆ) 25 சதவீதம்

Question 4.
‘சத்ய ஜோதக் சமாஜ்’ இயக்கத்தை தோற்றுவித்தவர்……………………
அ) கந்து கூரி
ஆ) ஜோதிபா பூலே
இ) ஈ.வே. ராமசாமி
ஈ) B.R. அம்பேத்கார்
Answer:
ஆ) ஜோதிபா பூலே

Question 5.
‘குலாம்கிரி’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டவர் ……………………
அ) கோபாலகிருஷ்ண கோகலே
ஆ) பாலகங்காதர திலகர்
இ) இராஜாராம் மோகன்ராய்
ஈ) ஜோதிபா பூலே
Answer:
ஈ) ஜோதிபா பூலே

Question 6.
1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் ……………………
அ) மோதிலால் நேரு
ஆ) ஜவஹர்லால் நேரு
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) தாகூர்
Answer:
ஆ) ஜவஹர்லால் நேரு

Question 7.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் தொடங்கி நாள்………………….
அ) 1930 ஏப்ரல் 13
ஆ) 1930 ஏப்ரல் 31
இ)1930 மார்ச் 28
ஈ) 1930 ஏப்ரல் 28
Answer:
அ) 1930 ஏப்ரல் 13

Question 8.
காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்………………………..
அ) 1931 பிப்ரவரி 5
ஆ) 1931 மார்ச் 5
இ) 1931 பிப்ரவரி 28
ஈ) 1931 ஏப்ரல் 5
Answer:
ஆ) 1931 மார்ச் 5

Question 9.
எது – எவை சரியாக பொருந்தியுள்ளது?
அ. அம்பேத்கார் – கொலம்பியா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்
ஆ. 2வது வட்டமேசை மாநாடு – அம்பேத்கார்
இ. ராஜாஜி – வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
ஈ. 1931 மார்ச் 15 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்

அ) அ மற்றும் ஆ
ஆ ) ஆ மற்றும் இ
இ) அ மற்றும் ஈ
ஈ) அ மற்றும் இ
Answer:
ஈ) அ மற்றும் இ

Question 10.
மீரட் சதி வழக்கு பதியப்பட்ட ஆண்டு……………………
அ) 1929
ஆ) 1930
இ) 1932
ஈ) 1933
Answer:
இ) 1932

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
“சத்யாகிரகி” வரையறு.
Answer:

  • ஒரு சத்யாகிரகி தனது மனதில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.
  • தவறு செய்தவரை வெறுக்கக்கூடாது.
  • எதிர்ப்பின் பாதையில் ஒரு சத்யாகிரகி சிரமங்களை ஏற்றுக் கொள்வார்.
  • அவரது நடவடிக்கையில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை .
  • அஹிம்சையும் உண்மையும் அச்சமற்றவர்களின் ஆயுதங்களாக விளங்கும்.

Question 2.
சம்பரான் இயக்கம் பற்றி கூறுக.
Answer:

  • சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
  • பீகாரின் சம்பரான் மாவட்ட விவசாயிகள் நீலச்சாயத்தை கட்டாயம் பயிரிட வேண்டும் என்றும் அதனை வர்த்தகர்கள் கூறும் விலைக்கே விற்க வேண்டும் எனவும் கூறப்பட்டனர்.
  • இது விவசாயிகளை வறுமையின் பிடியில் சிக்க வைத்தது.
  • காந்தியடிகளையும் உறுப்பினராகக் கொண்ட ஒரு குழு விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது.
  • ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்து சம்பரான் விவசாயிகள் மீட்கப்பட்டனர். வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானைவிட்டே வெளியேறிவிட்டனர்.

Question 3.
“லாகூர் காங்கிரஸ்” மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
Answer:

  • முழுமையான சுதந்திரம் அடைவது என்பதை குறிக்கோளாகக் கொண்டு
  • 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாடு ஜவஹர்லால் நேரு தலைமையில் கூட்டப்பட்டது. * 1929 டிசம்பர் 31ல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
  • சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Question 4.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் – குறிப்பு தருக.
Answer:

  • தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது.
  • திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
  • 1930 ஏப்ரல் 13ல் இருந்தே ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28ல் முடிவடைந்தது.
  • வேதாரண்யம் இயக்கம் உண்மையில் தென்னிந்திய மக்களைத் தட்டியெழுப்பிக் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.

Question 5.
சௌரி சௌரா நிகழ்ச்சி பற்றி கூறுக.
Answer:

  • உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்த சௌரி சௌரா கிராமத்தில். சுமார் 3000 விவசாயிகள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாயினர்.
  • இதனால் கோபமுற்ற மக்கள் அவ்வூர் காவல் நிலையத்தை தாக்கி தீக்கிரையாக்கினர். இச்சம்பவத்தில் சுமார் 22 காவல் துறையினர் உயிரிழந்தனர்.

இதுவே சௌரி சௌரா நிகழ்ச்சி எனப்படுகிறது.’

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
“தண்டியாத்திரை” என்பது என்ன?
Answer:

  • லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அரசின் உப்பு வரியை எதிர்க்க – பாகர் படத்த முடிவு செய்யப்பட்டது.
  • அதன்படி காந்திஜி தலைமையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்காை ஓரம் உள்ள 375 கி.மீ. தொலைவில் உள்ள தண்டி கடற்கரைக்கு பாத யாத்திரையாக சென் உப்பகாய்ச்ச முடிவு செய்யப்பட்டது.
  • வந்தே மாதரம் என்ற உணர்வோடு 25 நாட்கள். 78 தொண்டர்களுடன் பார பாதிரையாக சென்று 1930 ஏப்ரல் 6ஆம் நாள் கையளவு உப்பு எடுக்கார் உட்பக்கு வரி செலுத்தும் பட்டால் விரி, பாமயாக்கினார். இதுவே “தண்டியாத்திரை” எனப்படும்.

Question 2.
அம்பேத்காரின் கட்சி அரசியலைப் பற்றி விவரி.
Answer:

  • சுதந்திர தொழிலாளர் கட்சியை 1937லும், பட்டியல் இனத்தவர் கூட்டம் 1942 ம் அம்பேத்கார் துவங்கினார்.
  • இவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதரவை சமன்படுத்த அம்பேத்காரின் சேவைகளை பயன்படுத்தியது.
  • 1942ல் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பிறகு அரசப்பிரதிநிதியின் அமைச்சராகவும் இடம் பிடித்தார்.
  • சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராகி அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அவர் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
வட்ட மேசை மாநாடுகள் பற்றி விவரிக்க.
Answer:
அ) முதல் வட்டமேசை மாநாடு:

  • தொழிற்கட்சி இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்ததும் அதன் முயற்சியால் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 12ம் நாள் முதல் வட்ட மேசை மாநாடு இலண்டனில் நடைபெற்றது.
  • டொமினியன் அந்தஸ்து வழங்க உறுதி அளிக்கப்படாததால் காங்கிரஸ் முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கவில்லை.
  • இம்மாநாட்டில் படிப்படியாக சுயஆட்சி இந்தியாவிற்கு வழங்கலாம் என பிரிட்டிஷ் பிரதம மந்திரி அறிக்கை விடுத்தார்.

ஆ) இரண்டாம் வட்டமேசை மாநாடு:

  • 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
  • காந்திஜி காங்கிரசின் பிரதிநிதியாக சென்றார்.
  • சுயாட்சி பற்றி ஏதும் கூறப்படாததால் இம்மாநாடு தோல்வியுற்றது.
  • மீண்டும் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இ) மூன்றாம் வட்டமேசை மாநாடு:

  • 1932ல் மூன்றாம் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
  • இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளாததால் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது.

Question 2.
சுயராஜ்ஜியக் கட்சி மற்றும் அதன் செயல்பாடுகளை விவரி.
Answer:
சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்:

  • சௌரி சௌரா நிகழ்ச்சியில் 22 காவல் துறையினர் உயிர் துறந்ததைக் கண்டு வருத்தமுற்ற காந்திஜி, ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார். நாடெங்கிலும் குழப்பநிலை ஏற்பட்டது.
  • காந்திஜியும் மற்ற தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் எழுச்சி தடைப்பட்டது.
  • மக்கள் எழுச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் அலிப்பூர் சிறையில் இருந்த சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் முயற்சியில் சுயராஜ்ஜிய கட்சி உருவாயிற்று.

சுயராஜ்ஜியக் கட்சியின் நோக்கம்:

  • தேர்தலில் போட்டியிட்டு வென்று, சட்டமன்றத்தில் இந்தியர்களும் இடம் பெற வேண்டும். –
  • ஆங்கில அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதே சுயராஜ்ஜியக் கட்சியின் நோக்கமாகும்.

செயல்பாடு:

  • மத்திய சட்ட பேரவை தேர்தலில் 101 இடங்களில் 42 இடங்களில் வெற்றி பெற்றது.
  • காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்ப்பதிலும் வெற்றி கண்டனர்.
  • காலம் செல்ல செல்ல அவர்களுடைய முயற்சிகளும் ஊக்கமும் குறைந்தது. –
  • பிரிவினைவாத சிந்தனைபோக்கு அவர்களை ஆட்டிப்படைத்தது. வகுப்புக் கலவரங்கள் நடந்தன. சுயராஜ்ஜியக் கட்சியும் பிரிவினைவாதத்தால் பாதிப்படைந்தது. 1925ல் சி.ஆர்.தாஸ் இறந்தவுடன் சுயராஜ்ஜியக் கட்சியும் மறைந்தது.

How to Prepare using Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 12th History All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes


How to use Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy