![]() |
Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes |
Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 10th Tamil |
Subject |
10th Tamil |
Chapter |
Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 10th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி notes PDF.
Download Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி
கற்பவை கற்றபின்
Question 1.
தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றையும் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் நூலகத்தில் படித்து எழுதி வருக.
தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல்
Answer:
‘நான் எந்தப்பாடலைப் பாடுவதற்காக இங்கு வந்தேனோ
இது இன்றுவரை பாடப்படாமலேயே உள்ளது
என் இசைக்கருவிகளைச் சரிசெய்வதிலேயே
என் நாட்களைக் கழித்துவிட்டேன்
உண்மையில் நேரம் வரவில்லை
வார்த்தைகள் பொருத்தப்படவில்லை
ஆசையினால் வரும் வலி ஒன்றே என் இதயத்தில் உள்ளது
பூமலரவில்லை காற்று பெருமூச்சுவிடுகிறது
நான் அவனது முகத்தைப் பார்த்ததில்லை
அவனது குரலைக் கவனித்தது இல்லை
என் வீட்டிற்கு முன்னாள் உள்ள சாலையில் இருந்து
அவனது மெல்லிய காலடி ஓசையை மட்டும் கேட்டிருக்கிறேன்
Question 2.
மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றைப் படித்து அதன் கதைச்சுருக்கத்தையும் உங்கள் கருத்துகளையும் வகுப்பறையில் கூறுக.
Answer:
சிப்பிப் புழு ஒன்றின் கதை இது.
சிப்பிப் புழு உலகில் தானே அதி முக்கியமான ஜீவனாக எண்ணியது. பட்டுப் புழுவும் பயன் உள்ளதே ஆனால் பட்டு முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவது இல்லை. எனவே தன்னை உயர்வாக எண்ணியது சிப்பிப்புழு .
ஒரு நாள் கடலில் பெரும்புயல் வீசியது. சிப்பிப் புழு தன் கூட்டை மூடிக் கொண்டு, பாதுகாப்புக்காகத் தரைக்குப் போகக் கூடாது என்று எண்ணி கடலுக்குள் இருந்தது. ஆனால் இந்த அலை சிப்பிப்புழுவை விட்டு வைக்கவில்லை. அதனைத் தூக்கிக் கடலில் வாரிப் போட்டது. புழு மெதுவாக சிப்பியைத் திறந்து வெளியில் மெதுவாக எட்டிப் பார்த்தது. அதற்குள் மற்றொரு அலை வந்து அதனை மணலில் தூக்கிப் போட்டது. கடலுக்குள் திரும்பிப் போக வழியில்லாமல் அங்கேயே கிடந்தது. அது மிகவும் கோபம் அடைந்தது.
காகம் ஒன்று சிப்பியிடம் வெளியே வா என்றது; ஆனால் சிப்பி புழு, அருவருப்பான முட்டாளான உன்னிடம் பேச முடியாது என்றது. காகம் எவ்வளவு சொல்லியும் சிப்பி புழு வெளிவரவில்லை . மாறாக காகத்தைக் கேலி செய்து கொண்டே இருந்தது. நான் முத்துகளை உண்டாக்குவதால் தான் கடலுக்குப் பெருமை என்று கர்வமாகச் சிப்பி புழு கூறியது. ‘முத்து செய்யும் பெரிய நபரைப் பார்க்கின்றேன்’ வெளியே வா என்றது காகம். ஆனால் முடிந்தால் நீ பெரிய புத்திசாலி என்றால் என் சிப்பியை நீயே திறந்து கொள் என்றது புழு.
நல்லது நீயே சொல்லி விட்டாய் என்று சொல்லிக் காகம் சிப்பியைத் தன் அலகில் தூக்கி மேலே பறந்து போய்ப் பாறைகள் நடுவே போட்டது. சிப்பி தூள் தூளானது. காகம் சிப்பியைத் தன் அலகால் கொத்தி விழுங்கியது. பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடம் இருந்து விலகி, சாணக்குவியலில் விழுந்தது. காகம் உயரப் பறந்து மகிழ்வுடன் கத்திச் சென்றது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி …………………………….
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
Answer:
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
குறுவினா
Question 1.
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுது.
Answer:
தாய்மொழித் தமிழும் உலகப்பொதுமொழி ஆங்கிலமும் தவிர, நான் கற்க விரும்பும் மொழி இந்தி.
இந்தி கற்க விரும்பும் காரணம் :
- இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
- இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
- பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
- அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
- வடநாட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவும் மொழி இந்தி.
சிறுவினா
Question 1.
உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Answer:
- என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
- நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா! நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?
அப்துல் கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார். இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர்போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோடே பள்ளிக்கு வா. படித்துப் பணிக்குப் போகலாம்.
அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.
Question 2.
ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு
ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால் ஒருவர் பேசும்போதேமொழிபெயர்ப்பது, விளக்குவது என்று (InterPreting)சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Head Phone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வெளியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தன்முன் உள்ள காதணி கேட்பியை (Head Phone) எடுத்து பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.
Answer:
இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக.
- ஐ.நா.அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
- மொழி பெயர்ப்பு என்றால் என்ன?
- பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படிப் புரிந்து கொள்கின்றனர்?
- மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
- ஐ.நா.அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப் படுகிறது?
- ஐ.நா.அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
- காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
- ‘விளக்குவது’ (Inter Preting) என்றால் என்ன?
நெடுவினா
Question 1.
தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல்
கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை, என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்க கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
உலகம் தகவல் தொழில்நுட்பத்தினால் சுருங்கி விட்ட சூழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.
வரையறை:
மொழிபெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எந்தவித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.
தமிழ் இலக்கிய வளம் :
தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிறமொழியில் சிறந்து விளங்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.
கல்வி மொழி :
மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுப் பல்வேறு துறையில் சிறந்து விளங்கமுடியும்.
பிறமொழி இலக்கியம் :
ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்தது.
அறிவியல் கருத்துகள் :
மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பல்துறை கருத்துகள் :
கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிறதுறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளிலும் மொழிபெயர்ப்புப் பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்றுமொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.
முடிவுரை:
எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழிபெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்தால் நிலைபெற்று விளங்கும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பிறநாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் எப்போது நிறுவப்பட்டன?
அ) சுதந்திரத்திற்கு முன்
ஆ) விடுதலைக்குப் பின்
இ) குடியரசுக்கு முன்
ஈ) குடியரசுக்குப் பின்
Answer:
ஆ) விடுதலைக்குப் பின்
Question 2.
மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..
அ) பெயரியல்
ஆ) வினையியல்
இ) மரபியல்
ஈ) உயிரியல்
Answer:
இ) மரபியல்
Question 3.
இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சிற்றிலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
Answer:
அ) சங்க இலக்கியம்
Question 4.
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
அ) வி.சூ. நைப்பால்
ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்
இ) வெங்கட்ராமன்
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Question 5.
‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..
அ) பதில் தர மறுக்கிறோம்
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
இ) விடைதர முடியாது
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
Question 6.
வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) கலிங்கத்துப்பரணி
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) கலிங்கத்துப்பரணி
Question 7.
மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..
அ) சாகித்திய அகாதெமி
ஆ) தேசிய புத்தக நிறுவனம்
இ) தென்னிந்திய புத்தக நிலையம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
Question 8.
பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..
அ) தனியார் நிறுவனங்கள்
ஆ) வெளிநாட்டு தூதரகங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்
Question 9.
‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
Answer:
அ) குலோத்துங்கன்
Question 10.
பொருத்தித் தெரிக.
அ) 1942 – 1. யூமா வாசுகி
ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி
இ) 2016 – 3. ராகுல் சாங்கிருத்யாயன்
ஈ) 2018 – 4. கணமுத்தையா
அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 4. 3, 1
Answer:
அ) 3, 4, 2, 1
Question 11.
நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது………………..
அ) நாடகம்
ஆ) மொழிபெயர்ப்பு
இ) தியானம்
ஈ) செல்வம்
Answer:
ஆ) மொழிபெயர்ப்பு
Question 12.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………………..
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) அ. முத்துலிங்கம்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
ஆ) மணவை முஸ்தபா
Question 13.
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று………………..
கூறியவர்
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) மு. மேத்தா
ஈ) அ. முத்துலிங்கம்
Answer:
அ) மு. கு. ஜகந்நாதர்
Question 14.
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
அ) உத்திரமேரூர்
ஆ) மண்டகப்பட்டு
இ) சின்னமனூர்
ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
இ) சின்னமனூர்
Question 15.
சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று………………..
அ) உத்திரமேரூர் கல்வெட்டு
ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
இ) மண்டகப்பட்டுக் கல்வெட்டு
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
Answer:
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
Question 16.
வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.
அ) சீவக சிந்தாமணி
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) சிலப்பதிகாரம்
Question 17.
வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக.
அ) பெருங்கதை
ஆ) முக்கூடற்பள்ளு
இ) கலிங்கத்துப் பரணி
ஈ) மணிமேகலை
Answer:
அ) பெருங்கதை
Question 18.
பாரதியின் மொழிபெயர்ப்புகளைப் பொருத்திக் காட்டுக.
i) பொருட்காட்சி – 1. Strike
ii) இருப்புப் பாதை – 2. Revolution
iii) புரட்சி – 3. East Indian Railways
iv) வேலை நிறுத்தம் – 4. Exhibition
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 2, 4, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 19.
ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ……………….. அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர்.
அ) வேர்ட்ஸ் வொர்த்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) லாங்பெல்லோ
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஆ) ஷேக்ஸ்பியர்
Question 20.
………………..ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
இ) 18
Question 21.
மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ………………..
அ) நடப்பியல்
ஆ) தத்துவவியல்
இ) இலக்கியத் திறனாய்வு
ஈ) திறனாய்வு
Answer:
இ) இலக்கியத் திறனாய்வு
Question 22.
1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ………………..
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
ஆ) சசிதேவ்
இ) கணமுத்தையா
ஈ) வெ. ஸ்ரீராம்
Answer:
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
Question 23.
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு ………………..
அ) 1942
ஆ) 1945
இ) 1949
ஈ) 1952
Answer:
இ) 1949
Question 24.
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டும், மொழி……………….. பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.
i) கணமுத்தையா – 1. 1949
ii) டாக்டர் என். ஸ்ரீதர் – 2. 2016
iii) முத்து மீனாட்சி – 3. 2016
iv) யூமாவாசுகி – 4. 2018
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 1, 2, 3, 4
Question 25.
வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ………………..
அ) Camel
ஆ) Cow
இ) Horse
ஈ) Rope
Answer:
அ) Camel
Question 26.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ……………….. நூல்கள் வரை மொழி பெயர்க்கப் படுகின்றன.
அ) 1000
ஆ) 2000
இ) 4000
ஈ) 5000
Answer:
ஈ) 5000
Question 27.
தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் முதலிடத்தில் இரண்டாமிடத்தில் ……………….. இடம் வகிக்கின்றன.
அ) ஆங்கிலம், மலையாளம்
ஆ) மலையாளம், ஆங்கிலம்
இ) தெலுங்கு, கன்னடம்
ஈ) இந்தி, வடமொழி
Answer:
அ) ஆங்கிலம், மலையாளம்
Question 28.
மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி ……………….. ஏற்படுகிறது.
அ) மொழிவளம்
ஆ) மொழி வளமிழப்பு
இ) மொழி சிதைவு
ஈ) மொழி மாற்றம்
Answer:
அ) மொழிவளம்
Question 29.
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் ……………….. என்று குறிப்பிடுவார்கள்.
அ) பயன்கலை
ஆ) நிகழ்கலை
இ) கவின்கலை
ஈ) ஆயக்கலை
Answer:
அ) பயன்கலை
Question 30.
………………..பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) ஹார்வர்ட்
ஈ) சென்னை
Answer:
இ) ஹார்வர்ட்
Question 31.
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – என்று பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதியார்
Question 32.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்று பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
அ) பாரதியார்
Question 33.
பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ……………….. பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
அ) நூறு
ஆ) ஆயிரம்
இ) மூவாயிரம்
ஈ) பதினாறாயிரம்
Answer:
ஆ) ஆயிரம்
Question 34.
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
– பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து?
அ) பலதுறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆ) பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன்ற வேண்டும்.
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.
ஈ) கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
Answer:
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.
குறுவினா
Question 1.
மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?
Answer:
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை, வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார் மணவை முஸ்தபா.
Question 2.
மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை யாது?
Answer:
ஒரு மொழி, வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது.
Question 3.
மொழிபெயர்ப்பு குறித்து மு.கு ஜகந்நாதர் குறிப்பிடுவது யாது?
Answer:
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்று மு.கு. ஜகந்நாதர் குறிப்பிடுகிறார்.
Question 4.
மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் எது?
Answer:
தொல்காப்பியர் மரபியலில் மொழிபெயர்த்தல் என்ற தொடரைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதை உணர முடிகிறது.
Question 5.
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நிறுவுக.
Answer:
‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பின் மூலம் சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை உணர முடிகிறது.
Question 6.
வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் யாவை?
Answer:
வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள். பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியவை ஆகும்.
Question 7.
பிறமொழிக் கருத்துகள் சங்க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப்பட்டன என்பதை விளக்குக.
Answer:
வடமொழியில் வழங்கிவந்த இராமாயண மகாபாரத செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று இருப்பதைக் காணும்போது பிறமொழிக் கருத்துகள் சங்க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப் பட்டன என்பதை உணர முடிகிறது.
Question 8.
மொழிபெயர்ப்பு முயற்சியை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை?
Answer:
சாகித்திய அகாதமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம் ஆகியவை மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொண்ட நிறுவனங்கள் ஆகும்.
Question 9.
இந்திய அரசு மக்களிடையே மொழிபெயர்ப்பை எதற்குப் பயன்படுத்தியது?
Answer:
மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பை இந்திய அரசு கருவியாக பயன்படுத்தியது.
Question 10.
அனைத்துலக அறிவையும் எளிதில் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer:
மொழிபெயர்ப்பைக் கல்வியாகவும் அதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதில் பெறலாம்.
Question 11.
பிறநாட்டுத் தூதரகங்கள் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதன் நோக்கம் யாது?
Answer:
பிறநாட்டுத் தூதரகங்கள் தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்றவற்றை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனே தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றன.
Question 12.
பிறநாட்டு மொழிகள் எங்கு கற்பிக்கப்படுகிறது?
Answer:
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பிறநாட்டு மொழிகளைக் கற்கலாம். சில தனியார் நிறுவனங்களும் பிற நாட்டு மொழிகளைக் கற்பிக்கின்றன.
Question 13.
மொழிபெயர்ப்பு எதற்கு உதவுகிறது?
Answer:
பிற மொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.
Question 14.
மொழி வேலியை மொழிபெயர்ப்பு அகற்றுகிறது என்பதை விளக்குக.
Answer:
கலைச் சிறப்புடையதாக இருக்கின்ற இலக்கியங்கள் அனைவரது அனுபவமாக மாறும்போது பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழியை வெளியே அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.
Question 15.
ஜெர்மன் யாரை தன் நாட்டு படைப்பாளியாகக் கொண்டாடுகிறது? ஏன்?
Answer:
ஷேக்ஸ்பியர்.
காரணம்:
ஷேக்ஸ்பியர் தாம் எழுதிய நூலை ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய்த காரணத்தால் ஜெர்மன் தன் நாட்டுப் படைப்பாளியாகக் கொண்டாடுகிறது.
Question 16.
ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழ் மொழியில் அறிமுகமான பிறமொழி நூல்கள் யாவை?
Answer:
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாக பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின. இவற்றில் தரமான நூல்கள் குறைவே.
Question 17.
மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை யாது?
Answer:
தமிழ் மொழிக்குரிய நூலாகிய திருக்குறள் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணமாக உலகப் பொதுமறையாக உயர்ந்தது.
Question 18.
மொழிபெயர்ப்பின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழிபெயர்ப்பு தொடங்கியது.
Question 19.
மொழிபெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன்மை பெறும் முறைகள் யாவை?
Answer:
கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன மொழிபெயர்ப்பு வாயிலாகவே சர்வதேசத் தன்மை பெறுகின்றன.
Question 20.
தன் நூலை தானே மொழிபெயர்த்தவர் யார்? அதனால் அவருக்கு கிடைத்த சிறப்பு யாது?
Answer:
இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
Question 21.
மொழிபெயர்க்கப்படாமையால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?
Answer:
மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.
Question 22.
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?
Answer:
ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.
Question 23.
ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியையும் அறிவையும் மதிப்பிடுவது எது?
Answer:
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.
Question 24.
இப்பொழுது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?
Answer:
பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.
Question 25.
இலக்கியத் திறனாய்வு கொள்கை பற்றி எழுதுக.
Answer:
மொழிபெயர்ப்பின் மூலம்தான் நாம் இலக்கியத்திறனாய்வு கொள்கைகளைப் பெற்று இருக்கிறோம். இன்றுள்ள திறனாய்வு குறைகளை எல்லாம் நாம் ஆங்கிலத்தின் வழியாகவே பெற்றிருக்கிறோம்.
Question 26.
மொழிபெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும்?
Answer:
மொழிபெயர்ப்புகள் கழிவின்றி சிதறலின்றி மூலமொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
Question 27.
Camel என்பதன் மொழிபெயர்ப்பை விளக்குக.
Answer:
Camel என்பதற்கு வடம், ஒட்டகம் என்ற இரு பெயர்கள் உண்டு.
“ஊசி காதில் வடம் நுழையாது” என்ற வேற்றுமொழித் தொடரை “ஊசி காதில் ஒட்டகம் நுழையாது” எனத் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே மொழிபெயர்க்கும் போது கருத்தும் பொருளும் மாறாமல் சரியாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
சிறுவினா
Question 1.
மொழிபெயர்ப்பு பற்றி அறிஞர்கள் கூறும் கருத்து யாது?
Answer:
மணவை முஸ்தபா :
‘ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார். மு.கு. ஜகந்நாதர்.
‘ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும் உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்’ என்கிறார்.
Question 2.
மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் கலங்கம் நேர்ந்தது விவரி.
Answer:
உலகப் போரின்போது அமெரிக்கா சரணடையாவிட்டால் குண்டு வீசப்படும் என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், ‘மொகு சாஸ்ட்டு’ என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹிரோஷிமாவில் குண்டு வீசியது என்று சொல்கிறார்கள். அந்தத்தொடருக்கு விடைதர அவகாசம் வேண்டும்’ என்பதாம். ஆனால் அதற்கு அமெரிக்கர்கள் ‘மறுக்கிறோம்’ என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர். அதனால்தான் அழிவு தரும் களங்கம் நேர்ந்தது; மொழிபெயர்ப்புச் சரியாக அமைந்து இருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும்.
Question 3.
இடம்பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதைச் சான்றுடன் விவரிக்க.
Answer:
Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிற போது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைநோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்க ப்பட்டன. இதற்கு மாறாக Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும்போது படியெடுத்தல், மாறுதல், உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை. எனவே இடம் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
How to Prepare using Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 10th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.5 அணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.5 அணி Notes
0 comments:
Post a Comment