Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Wednesday, September 22, 2021

Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes

Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes
Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes


Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 12th Tamil

Subject

12th Tamil

Chapter

Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 12th Tamil Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் notes PDF.

Download Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF from the links provided in this article.


Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
இடப்பாகுபாடு தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைப் பாடப்பகுதியிலிருந்து சான்று காட்டுக.
Answer:
தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.
சான்று: நான் புத்தகம் படித்தேன்.

தன்மைப் பன்மை
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும்.

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டுப் பேசுவது.
சான்று: நாம் முயற்சி செய்வோம்.

உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை
பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மைப் பன்மையில் பேசுவது.
சான்று: நாங்கள் முயற்சி செய்வோம்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
தமிழில் திணைப்பாகுபாடு …………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
Answer:
அ) பொருட்குறிப்பு

Question 2.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்
அ) நன்னூல்
ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) தொல்காப்பியம்

Question 3.
யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
Answer:
ஆ) உயர்திணை, அஃறிணை

Question 4.
பொருத்துக.
அ) அவன் அவள் அவர் – 1. உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் – 2. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் – 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் – 4. பதிலிடு பெயர்கள்

அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 4, 1, 2, 3

Question 5.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
Answer:
திணை , பால், எண், இடம்.

Question 6.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விடுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
Answer:

  • நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்.
  • அவர்கள் ஆலயம் வந்தார்கள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ………….. பாகுபாடு அமைந்துள்ளது.
அ) இருதிணைப்
ஆ) பால்
இ) இடப்
ஈ) எண்
Answer:
ஆ) பால்

Question 2.
பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே வினைமுற்றின் ……………….. ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
அ) திணை , பால்
ஆ) திணை , எண்
இ) திணை , பால், எண்
ஈ) திணை , விகுதி
Answer:
இ) திணை , பால், எண்

Question 3.
‘அவர்கள்’ என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும்
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) பதிலிடு பெயர்ச்சொல்
ஈ) பதிலிடு வினைச்சொல்
Answer:
இ) பதிலிடு பெயர்ச்சொல்

Question 4.
தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………… இடத்திலும் வரும்.
அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer:
ஈ) முன்னிலை

Question 5.
சரியானதைத் தேர்க.
அ) பத்துமரம் வீழ்ந்த து – ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படவில்லை
ஆ) நாம் முயற்சி செய்வோம் – உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
இ) நாங்கள் முயற்சி செய்வோம் – ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படுகிறது
ஈ) அவர்கள் – பதிலிடு பெயர்ச்சொல்
Answer:
ஈ) அவர்கள் – பதிலிடு பெயர்ச்சொல்

Question 6.
சரியானதைத் தேர்க.
அ) யார்? எது? – பால் வேறுபாடு
ஆ) ஆசிரியர் வந்தார் – பலர்பால் விகுதி உயர்வு விகுதி வரும்
இ) அவர் வந்தார் – பன்மைப் பொருளை உணர்த்துகிறது
ஈ) தங்கமணி பாடினான் – பெண்பால் விகுதி பெற்றுள்ளது
Answer:
ஆ) ஆசிரியர் வந்தார் – பலர்பால் விகுதி உயர்வு விகுதி வரும்

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது.
ஆ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளன.
இ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.
ஈ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளன.
Answer:
இ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) பத்துத் தேங்காய்கள்
ஆ) இரண்டு மனிதர்
இ) ஒரு மரம் வீழ்ந்த ன
ஈ) அவர்கள் வந்தார்கள்
Answer:
ஈ) அவர்கள் வந்தார்கள்

Question 9.
பொருத்துக.
அ) பேசுபவன், கேட்பவன், பேசப்படும் பொருள் – 1. ஆண்பால் பெண்பால் பொதுப்பெயர்
ஆ) பத்துத் தேங்காய் – 2. பலர்பால் சொல்
இ) தங்கமணி – 3. அஃறிணைபன்மைவிகுதிகட்டாயமில்லை
ஈ) மாணவர் வந்தனர் – 4. தன்மை, முன்னிலை, படர்க்கை

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 1, 2
இ) 4, 1, 3, 2
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 4, 3, 1, 2

Question 10.
மொழியின் அடிப்படைப் பண்புகள்
i) திணை
ii) பால்
iii) எண்
iv) இடம்

அ) i), ii) சரி
ஆ) iii), iv) சரி
இ) ili), iv) சரி மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 11.
உலக மொழிகள் அனைத்திலும் ………….. மிகுதி என்பர்.
அ) பெயர்ச்சொற்களே
ஆ) வினைச்சொற்களே
இ) இடைச்சொற்களே
ஈ) உரிச்சொற்களே
Answer:
அ) பெயர்ச்சொற்களே

Question 12.
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் …………….. வகையாகப் பிரிப்பர்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 13.
தமிழில் ……………. பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அ) எண்
ஆ) செய்யுள்
இ) இலக்கிய
ஈ) பால்
Answer:
ஈ) பால்

Question 14.
…………. அடிப்படையிலேயே ஒன்றன்பால் பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.
அ) பால்
ஆ) இட
இ) தன்மை, முன்னிலை
ஈ) ஒருமை, பன்மை
Answer:
ஈ) ஒருமை, பன்மை

Question 15.
இடம் …………… வகைப்படும்.
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 16.
தன்மைப் பன்மையில் உள்ள வகை …………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 17.
பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

Question 18.
பேசுபவர் முன்னிலையாளரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

Question 19.
நாம் முயற்சி செய்வோம் என்பது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தா முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

Question 20.
நாங்கள் முயற்சி செய்வோம் என்பது
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தா முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

குறுவினா

Question 1.
மொழியின் பண்புகள் யாவை?
Answer:
திணை , பால், எண், இடம்.

Question 2.
பயனிலை விகுதிகளில் எவை பால் பகுப்பைக் காட்டுகின்றன?
Answer:
ஆன், ஆள், ஆர், அது, அன்.

Question 3.
தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றம் அடைந்துள்ளதை உணர்த்தும் இரு தொடர்களை எழுதுக.
Answer:

  • காளைமாடு வயலில் உழுதது.
  • ஆண்குரங்கு மரத்தில் குதித்தது.

Question 4.
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிப்பர்? அவை யாவை?
Answer:
பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் இருவகையாகப் பிரிப்பர். அவை: உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர்.

Question 5.
இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இடம் மூவகைப்படும். அவை: தன்மை, முன்னிலை, படர்க்கை.

Question 6.
பதிலிடு பெயர்கள் யாவை?
Answer:
அவன், அவள், அவர், அது, அவை.

Question 7.
தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படுவன யாவை?
Answer:

  • பேசுபவன்
  • முன்னிருந்து கேட்பவன்
  • பேசப்படுபவன் (அல்லது) பேசப்படும் பொருள்
    ஆகிய மூன்றும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படும்.

Question 8.
உளப்பாட்டுத்தன்மைப் பன்மை என்பது யாது?
Answer:
பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடைய சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.
சான்று : நாம் முயற்சி செய்வோம்.

Question 9.
உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை என்பது யாது?
Answer:
பேசுபவர் முன்னிலையாரையும் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.
சான்று : நாங்கள் முயற்சி செய்வோம்.

Question 10.
தன்மைப் பன்மையின் வகைகள் யாவை?
Answer:
தன்மைப்பன்மை இரண்டு வகைப்படும். அவை: உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை.

Question 11.
மொழியின் இலக்கணம் குறித்துத் தமிழ் நடைக் கையேட்டின் கூற்று யாது?
Answer:
ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் என்பது தமிழ் நடைக் கையேட்டின் கூற்றாகும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக் தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878) என்று, இன்றும் நினைவு கூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், ‘நீயே புருஷ மேரு…..

‘ என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம். அவர், மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர்; தமிழின் முதல் நாவலான பிரதபா முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய அவர், மாயூரம் வேதநாயகம் தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், (1826 – 1889 இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் போன்றோரிடம் நட்புப் பாராட்டி நெருங்கியிருந்தார்; கி.பி.

1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக வெளியிட்டார் ; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூ ல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்; வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றறிந்திருந்தார். அவர், பெண்கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார். அவருடைய மொழியாட்சிக்குச் சான்றாக, பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு பத்தி :

“கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்” என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக்கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது.

பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, “என் கண்மணியே, நீ சொல்வது எள்ளளவுஞ் சரியல்ல. கல்விடி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது ? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்?” என்றார்.

வினாக்கள்:

1. தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தின் பெயர் என்ன?
2. தமிழின் முதல் நாவல் எது? அதனை எழுதியவர் யார்?
3. மாயூரம் வேதநாயகம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் யாவர்?
4. தமிழின் முதல் நாவலான பிரதாப் முதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்?
5. பார்த்தாள் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
6. மாயூரம் வேதநாயகம் எழுதிய நூல்கள் யாவை?
7. ‘சொன்னேன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல் எது?
Answer:
1. தாது வருடப் பஞ்சம்.
2. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். அதனை எழுதியவர் மாயூரம் வேதநாயகம்.
3. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர்.
4. மாயூரம் வேதநாயகம்.

5. பார்த்தாள் – பார் + த் + த் + ஆள்
பார் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

6. ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற பெயரில் வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார்.

7. வேர்ச்சொல் – ‘சொல்’.

மொழிப் பெயர்ப்புப் பகுதியைப் படித்து, இருபது ஆங்கிலச் சொற்களையும் அதன் தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக

In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democracy.

This led Kenya to Kenya’s first fully elections in a generation. In the election,democratic Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformed the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.

1977-ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யாநாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள், இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்கப் பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல் ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர்.

அவர் இந்த இயக்கத்தின் வழியாக மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல் முறையாகத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தேர்தலில் வங்காரி மத்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார்.

கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்ததால் அவரது தன்னலமற்ற | பணியைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசுவழங்கப்பட்டது. நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் சமூகக்காடுகள்வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண் களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

எ.கா: Green Belt Movement – பசுமை வளாக இயக்கம்

1. devastation – பேரழிவு
2. deforestation – காடழிப்பு
3. thirty years – முப்பது ஆண்டுகள்
4. founded – நிறுவப்பட்டது
5. regions – மண்டலங்கள்
6. providing – விநியோகம்
7. halting – ஓய்விடங்கள்
8. soil erosion – மண்ண ரிப்பு
9. desertification – பாலைவனமாக்கல்
10. enlighten – அறிவூட்டல்
11. representative – பிரதிநிதி
12. generation – தலைமுறை
13. democracy – குடியாட்சி
14. parliament – நாடாளுமன்றம்
15. election – தேர்தல்
16. success – வெற்றி
17. tens of thousands – பல்லாயிரக்கணக்கான
18. thirty million – மூன்றுகோடி
19. social forestry schemes – சமூக காடுகள் வளர்ப்புத் திட்டம்
20. Minister of environment – சுற்றுச்சூழல் அமைச்சர்

மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. தலை, தளை, தழை
2. கலை, களை, கழை
3. அலை, அளை, அழை
எ.கா : விலை, விளை, விழை
கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.

1. தலை, தளை, தழை
ஆட்டிற்குத் தழை திருடப்போன இடத்தில் மரத்தில் தலை தட்டி விழுந்தவனைத் தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் அழைத்துச் சென்றான்.

2. கலை, களை, கழை
கழை காட்டில் தீப்பிடித்ததால் களைகளுடன் கலைமான்களும் செத்து மடிந்தன.

3. அலை, அளை, அழை
கடலலையில் விளையாடச் சென்ற முருகன் அளையில் இருந்த அரவம் தீண்ட எத்தனை முறை அழைத்தும் பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்தான்.

இலக்கிய நயம் பாராட்டுக

வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது ;
தொட்டியிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா! – பாரதியார்

முன்னுரை :
இப்பாடலைப் பாடியவர் மகாகவி பாரதியார் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்த இவர் இளைமையிலே கவிப்பாடும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காக அநேக பாடல்களைப் பாடியதால் தேசியக் கவி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் நூல்கள் மிகவும் சிறப்புப் பெற்றவையாகும்.

திரண்ட கருத்து :
பூமியை நோக்கி அடிக்கும் மின்னலானது பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருக்கின்றது. சூறாவளி காற்று அடிப்பதால் விண்ணைத் தொடும் அளவிற்கு கடலலையானது பொங்குகின்றது. மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் ஓசையானது காதால் கேட்க முடியாத அளவிற்குக் கொட்டி இடிக்கின்றது.

‘கூகூ’ என்ற ஓசையுடன் காற்றானது வேகமாக வீசி விண்ணைக் குடைகின்றது. மழைத்துளி மண்ணில் விழும் போது உண்டாகும் ஒலியோ மத்தளங்கள் இசைத்துத் தாளம் போடுவது போல ஒலிக்கின்றன. இடைவிடாமல் மழையைப் பொழிந்து பொழிந்து வானம் கனைக்கின்றது. எட்டுத்திசையும் இடியின் ஓசை கேட்க மழை எப்படிப் பூமியை வந்தடைந்தது.

மோனை நயம் :
குயவனுக்குப் பானை
செய்யுளுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும்.

சான்று:
வெட்டியடிக்குது
எட்டுத்திசையும்
வீரத்
எங்ஙனம்

எதுகை நயம் :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதலெழுத்து அளவு ஒத்துநிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

சான்று:
வெட்டியடிக்குது
தொட்டி
சட்டச்சட
எட்டுத்திசையும்

அணி நயம் :
அணியற்ற கவிதை
பிணியுள்ள வணிதை
மழையின் சிறப்பை உணர்த்த மழை பெய்வதற்கு முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளான இடி இடித்தல், மின்னல், காற்று வீசுதல் ஆகிய நிகழ்வுகளை எல்லாம் உயர்வுபடுத்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

சொல் நயம் :
சொல் போனால்
பல் போகும்
பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் ஒலிக்குறிப்புகளும் பொருளும் ஒரு பெரும் புயலை நம் கண்முன் காட்டுகின்றன. புதிய ஒலியின்பத்தையும் புதிய பொருளுணர்ச்சியையும் பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

சந்த நயம் :
சந்தம் தமிழுக்குச் சொந்தம்
ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்போருக்கும் மிகுந்த இன்பம் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் சிந்துப் பா வகையைச் சார்ந்ததாகும்.

முடிவுரை :
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக.

பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம்
நாள் : அக்டோபர் 2
நேரம் : காலை 10 மணி
இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை

பத்தி:
அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு இயற்கை வேளாண் உழவர் திரு, அமுதன் முன்னிலை வகிக்கிறார். இக்கருத்தரங்கில் முனைவர் செங்குட்டுவன் அவர்கள் இயற்கைச் சீற்றங்களும் பருவகால மாற்றங்களும் என்ற தலைப்பிலும், திரு.

முகிலன் அவர்கள் பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் என்ற தலைப்பிலும், திருமதி. பாத்திமா அவர்கள் நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலும், திரு. வின்சென்ட் அவர்கள் பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் என்ற தலைப்பிலும் கருத்துகளைத் தர உள்ள னர்.

கருத்தரங்கின் நிறைவாக, பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. இமயவரம்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசி அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் ஜமீலா அவர்கள் நன்றியுரை ஆற்றிட உள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், 112 கருத்தரங்க நிறைவில் நாட்டுப்பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மொழியோடு விளையாடு

புதிர்க்கேற்ற விடையை அறிக.

அ) அடைமழை பெய்த அடுத்த நாள்
படைபடையாய் வந்ததாம்
பரங்கி நாட்டு விமானம்
எதிரி சுடாமலேயே
இறகொடிந்து இறந்ததாம் – என்ன ?
Answer:
ஈசல்

ஆ) தண்ணீ ரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது – என்ன?
Answer:
கிளி

இன்னும் புதிர் அறிவோம்

1. கறுத்த ரோஜா மொட்டு
கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்திடும்
காத்திடும் பின் சாய்ந்திடும்
அது என்ன ?
Answer:
குடை

2. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்
மூத்த பெண் ஆற்றிலே ;
நடுப்பெண் காட்டிலே ;
கடைசிப் பெண் வீட்டிலே ;
அவைகள் யாவை?
Answer:
முதலை, உடும்பு, பல்லி

3. நான் ஏறும் குதிரை
நாலுகால் குதிரை
அந்தக் குதிரைக்கு
ஆயிரம் கண்கள் அது என்ன?
Answer:
கட்டில்

எண்ணங்களை எழுத்தாக்குக

வளமாக எல்லோரும் வாழ வசதியான இயற்கையைத் தந்த பூமியாகிய நான் இன்று வெப்பமிகுதியால் உருகிக் கொண்டிருக்கின்றேன். பச்சை பட்டாடை உடுத்தி பசுமையைத் தந்த என்னை வெம்மை என்னும் : – காட்டிலே தள்ளி விடும் மனித இனமே நான் இல்லை என்றால் நீ எப்படிப் பூமியில் வாழ்வாய் …!

எல்லா காலங்களிலும் பருவங்கள் தவறாது மழையைத் தந்தேன். நீங்கள் எல்லோரும் வளமாய் வாழ நல்ல நிலத்தைத் தந்தேன். உங்களுடைய சுயநலத்திற்காக என் அன்பு மகளாம் வளமான காட்டை அழித்து என்னை வறுமையாக்கி, வறட்சியை உண்டுபண்ணியது ஏன்?

இன்றைய வெப்ப மிகுதியால் என் உடல் சூடேறுகிறது. என்னைக் குளிர்விக்க வேண்டிய நீங்களே மீண்டும் மீண்டும் மரங்களை வெட்டுக்கின்றீர்கள் என்று எனக்காக அல்ல உங்களுக்காகக் கேட்கிறேன்: எப்போது ஒரு மரத்தை நடப்போகின்றீர்கள் அனலாகக் கொதிக்கும் என் உடலைக் கொஞ்சமாவது குளிர்விப்பாயா?

நஞ்சாகி வரும் நெகிழியை முற்றிலுமாகத் தவிர்த்து விடு. என் மேனியடையும் சூட்டைக் குறைத்து விடு ; எல்லா வளத்தையும் இலவசமாகத் தரும் என்னைக் காக்க மறந்திடாதீர்கள்! வரும் தலைமுறையினரும் வாழ்ந்திட நீங்கள் தடையாக இருக்காதீர்கள்.

மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக உங்கள் பள்ளி தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுது.

அனுப்புநர்
அஅஅஅ,
நிலை 12 ‘அ’ பிரிவு,
அரசு மேனிலைப்பள்ளி,
திருச்சி – 4.

பெறுநர்
உயர்திரு. தலைமையாசிரியர் அவர்கள்,
அரசு மேனிலைப்பள்ளி,
திருச்சி – 4.

ஐயா,

பொருள் : மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுவது தொடர்பாக.

வணக்கம்.
நான் தங்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு ‘அ’ பிரிவில் பயின்று வருகின்றேன். தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண் டியது அவசியமாகும்.

எனவே, மழை பெய்யும் போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை , ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும் போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த போதிய விழிப்புணர்வை உரிய நபர்கள் மூலம் வழங்கினீர்கள் என்றால் எங்களுக்கு மிகுந்த நன்மையாக இருக்கும்.

ஆகவே, தாங்கள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து அனைத்து மாணவர்களும் போதிய விழிப்புணர்வைப் பெற உதவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சி,
09.07.2019.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அஅஅஅ.

உங்கள் பகுதியில் புழங்கும் இருபது சொற்களைக் கொண்டு வட்டார வழக்குச் சொல் தொகுப்பு ஒன்றை உருவாக்குக.



படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர் வண்டி நிலையம்)

1. Platform – நடைைேட
2. Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
3. Train Track – இருப்புப்பாதை
4. Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
5. Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
6. Metro Train – மாநகரத் தொடர்வண்டி


How to Prepare using Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 12th Tamil All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes


How to use Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy