![]() |
Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes |
Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 12th History |
Subject |
12th History |
Chapter |
Chapter 11 புரட்சிகளின் காலம் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 12th History Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் notes PDF.
Download Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF from the links provided in this article.
Question 1.
வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள்
அ) போர்த்துகீசியர்
ஆ) ஸ்பானியர்
இ) டேனியர்
ஈ) ஆங்கிலேயர்
Answer:
ஈ) ஆங்கிலேயர்
Question 2.
நியூ ஆம்ஸ்ட ர்டாமிற்கு ……………… என மறுபெயர் சூட்டப்பட்டது.
அ) வாஷிங்டன்
ஆ) நியூயார்க்
இ) சிக்காகோ
ஈ) ஆம்ஸ்ட ர்டாம்
Answer:
ஆ) நியூயார்க்
Question 3.
கூற்று : ஆங்கிலேயர் நாவாய்ச் சட்டங்களை இயற்றினர்
காரணம் : காலனி நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமென்பதைச் இச்சட்டம் கட்டாயப்படுத்தியது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 4.
கூற்று : 1770இல் இங்கிலாந்து தேயிலையைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தது.
காரணம் : காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 5.
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு ……… இல் நடைபெற்றது.
அ) 1775
ஆ) 1773
இ) 1784
ஈ) 1799
Answer:
ஆ) 1773
Question 6.
கூற்று : ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.
காரணம் : அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 7.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை.
கூற்று I : 1776 ஜூலை 4இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தன.
கூற்று II : சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.
அ) I
ஆ) II
இ) இரண்டும் தவறு
ஈ) இரண்டும் சரி
Answer:
ஈ) இரண்டும் சரி
Question 8.
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்
அ) ரிச்சட்டு லீ
ஆ) ஜார்ஜ் வாஷிங்டன்
இ) வில்லியம் ஹோவே
ஈ) ராக்கிங்காம்
Answer:
இ) வில்லியம் ஹோவே
Question 9.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை?
கூற்று I : பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது.
கூற்று II : பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III : வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
அ) I மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஈ) அனைத்தும் சரி
Question 10.
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிப்புக்குத் தலைமையேற்ற பிரபு ……… ஆவார்.
அ) மாரட்
ஆ) டாண்டன்
இ) லஃபாய்ட்
ஈ) மிராபு
Answer:
ஈ) மிராபு
Question 11.
கூற்று : வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத் தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
காரணம் : அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
Question 12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ மாண்டெஸ்கியூ | 1 ஜேகோபியர்கள் |
ஆ வால்டர் | 2 ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி |
இ பயங்கர ஆட்சி | 3 பதினான்காம் லூயியின் காலம் |
ஈ ஜான் லாக் | 4 சட்டங்களின் சாரம் |
அ) 1 3 4 2
ஆ) 4 3 1 2
இ) 4 1 2 3
ஈ) 1 4 3 2
Answer:
ஆ) 4 312
Question 13.
பாஸ்டில் சிறை தகர்ப்பு …………… இல் நடந்தது.
அ) 1789, ஜூன் 5
ஆ) 1789, ஜூலை 14
இ) 1789, நவம்பர் 11
ஈ) 1789, மே1
Answer:
ஆ) 1789, ஜூலை 14
Question 14.
பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் …………….. அதிருப்தி கொண்டிருந்தார்.
அ) ஒலிம்பே டி கோஜெஸ்
ஆ) மேரி அன்டாய்னெட்
இ) ரோஜெட் டி லிஸ்லி
ஈ) ரோபஸ்பியர்
Answer:
அ) ஒலிம்பேடி கோஜெஸ்
Question 15.
பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது.
அ) வெர்செய்ல்ஸ்
ஆ) தௌலன்
இ) மார்செய்ல்ஸ்
ஈ) டியூ லெர்ஸ்
Answer:
ஈ) டியூ லெர்ஸ்
Question 16.
……………. தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.
அ) மெக்சிகோ
ஆ) பனாமா
இ) ஹைட்டி
ஈ) ஹவானா
Answer:
இ) ஹைட்டி
Question 17.
மெக்சிகோவில் புரட்சிக்குத் தலைமையேற்றவர் ……………
அ) சைமன் பொலிவர்
ஆ) ஜோஸ்மரியாமோர்லோ
இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
ஈ) மிகுவல் ஹிடல்கோ
Answer:
ஈ) மிகுவல் ஹிடல்கோ
Question 18.
அர்ஜென்டினாவை விடுதலையடையச் செய்தவர்…………………….
அ) சான் மார்ட்டின்
ஆ) டாம் பெட்ரோ
இ) பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
ஈ) மரினாமோர்லஸ்
Answer:
அ) சான் மார்ட்டின்
Question 19.
நகரம் ‘காட்டன் பொலிஸ்’ எனும் புனைப் பெயரைப் பெற்றது.
அ) மான்செஸ்டர்
ஆ) லங்காசயர்
இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
ஈ) கிளாஸ்கோ
Answer:
அ) மான்செஸ்டர்
Question 20.
கீழேகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ மைக்கேல் பாரடே | 1 ஆர்க்ரைட் |
ஆ எலியாஸ்ஹோவே | 2 ராபர்ட் புல்டன் |
இ நீர்ச் சட்டகம் | 3 மின்சாரம் |
நீராவிப் படகு | 4 தையல் இயந்திரம் |
விடை :
இ) 3 4 1 2
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
வடஅமெரிக்காவின் ஐரோப்பியக் காலனிகள் பூர்வகுடி மக்கள் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின?
Answer:
- பூர்வகுடிகளை அழித்தொழிக்க ஐரோப்பியர்கள் பின்பற்றிய தந்திரங்களில் ஒன்று நோய்களைப் பரப்புவதாகும்.
- அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான போர்வைகளை செவ்விந்திய பூர்வகுடிகளிடையே விநியோகம் செய்யப்பட்டன.
- காலனியவாதிகள் தங்கம் தேடும் முயற்சியில் பழங்குடி மக்களின் கிராமங்களில் தங்கியிருந்து கொடூரமாகத் தாக்கினர்.
- இது குடியேற்றவாதிகளுக்கும் அமெரிக்க பூர்வகுடிகளுக்குமிடையே பல போர்கள், உயிர்ச்சேதம், சொத்துப்பறிப்பு மற்றும் அடக்குமுறை வாயிலாக அப்பட்டமான இனவாதத்திற்கு இட்டுச் சென்றது.
Question 2.
பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
Answer:
- பாஸ்டன் படுகொலையைத் தொடர்ந்து 100 கிளர்ச்சியாளர்கள், பூர்வகுடி செவ்விந்தியர்களைப் போல வேடமிட்டனர்.
- இவர்கள் பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் எறிந்தனர்.
இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்பட்டது.
Question 3.
அமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு என்ன?
Answer:
- தாமஸ் பெயின் தனது ‘பொது அறிவு’ என்ற பிரசுரத்தில் குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி விவாதங்களை எழுதியிருந்தார்.
- சுதந்திரம் குறித்து ஹாப்ஸ், லாக், வால்டேர், ரூசோ ஆகியோர் கூறிய கருத்துக்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருந்தார்.
- இவரது இச்சிறு பிரசுரம், அமெரிக்க மக்களின் மீது கிளர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Question 4.
சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
Answer:
- அமெரிக்க சுதந்திர போரில் ஆங்கில படைக்கு தலைமை தாங்கியவர் வில்லியம் ஹோவே.
- அமெரிக்க படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
- வாஷிங்டன் தனது திட்டமிட்ட போர்த் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார்.
- 1777இல் சரடோகா போர் முனையில் ஆங்கிலப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைந்தார்.
- 1781இல் இறுதியாக யார்க் டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்துப் படைகள்
அமெரிக்க படைகளிடம் சரணடைந்தன. அமெரிக்க குடியேற்றங்கள் இதன் பிறகு விடுதலை அடைந்தன.
Question 5.
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
Answer:
- மதகுருமார்கள்
- நிலபிரபுக்கள்
- சாதாரண மக்கள் என்ற மூன்று எஸ்டேட்டுகள் பண்டைய ஆட்சிமுறையில் இருந்தன.
- சாதாரண மக்கள் கடும் வரி விதிப்பின் கொடுமைகளை எதிர் கொண்டனர்.
- மதகுருமார்களும் பிரபுக்களும் இவ்வரி விதிப்பிலிருந்து வரி விலக்கு பெற்றனர்.
Question 6.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
Answer:
- தனி மனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது.
- மக்கள் ஓய்வின்றி வரிகளை உயர்த்தக் கூடாதெனவும் குறிப்பிட்டது.
- அனைத்து மனிதர்களும் பிறப்பில் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் உள்ளனர் என்று கூறுகிறது.
Question 7.
இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.
Answer:
- சைமன் பொலிவர் ஒரு சக்தி வாய்ந்த ராணுவ, அரசியல் சக்தியாக உருவானார்.
- கிழக்கு ஆண்டிஷ் மலைப்பகுதி வரை தன் படைகளை நடத்தி சென்று வெற்றி பெற்றனர்.
- போயகா போர் களத்தில் தன் பகைவர்களைத் தோற்கடித்தார்.
Question 8.
தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை முன்னிலைப்படுத்திக்காட்டவும்.
Answer:
- தொழிற்புரட்சியின் இன்றியமையாத கூறு, அறிவியல் தொழிலில் புகுத்தப்பட்டதுதான்.
- இரும்பு, எஃகு, நிலக்கரி மற்றும் நீராவியின் ஆற்றல்கள் பயன்படுத்தப்பட்டது.
- புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, சிறப்பு தொழில்முறைகள் பின்பற்றப்பட்டன.
- போக்குவரத்திலும் செய்தித் தொடர்புகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ஆகியவை தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகள் ஆகும்.
Question 9.
சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தையெனக் கருதப்படுகிறார்?
Answer:
- ஆலையை இயக்குவதில் அனுபவம் பெற்றிருந்த ஆங்கிலக் குடிமகன் சாமுவெல் சிலேட்டர்.
- ரோட் ஐலெண்டைச் சேர்ந்த தொழில் அதிபர் மோசஸ் பிரவுன் ஒரு ஆலையை இயக்க முடியாமல் இருந்தார்.
- சிலேட்டரும், மோசஸ் பிரவுனும் இணைந்து செயல்பட்டு அந்த ஆலையை 1793ல் செயல்படுத்தினர்.
- அதுவே அமெரிக்காவின் நீர் உருளையால் இயக்கப்பட்ட முதல் ஜவுளி ஆலையாகும்.
- 1800இல் தொழில் முனைவோர் பலர் சிலேட்டரின் ஆலையைப் போன்றே பல ஆலைகளை உருவாக்கினர்.
- அமெரிக்க குடியரசுத் தலைவரான ஆண்ட்ரூ ஜேக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப் போற்றினார்.
Question 10.
பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
Answer:
- 1819ஆம் ஆண்டு தொழிலில் மந்தநிலையும் உணவுப்பொருட்களின் விலையேற்றமும் ஏற்பட்டது.
- அதிருப்தியுற்ற மக்கள் ஹென்றி ஹன்ட் எனும் தீவிரவாதத் தலைவரின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கூட்டத்தின் எண்ணிக்கையையும் அவர்களின் மனநிலையையும் கண்டு பீதியடைந்த அதிகாரிகள் மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படை காவலர்களைக் கொண்டு தாக்க உத்தரவிட்டனர்.
- இதில் 17 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் படுகாயம் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டனர்.
இது பீட்டர்லூ படுகொலை எனப்படுகிறது.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
1783இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை விவாதிக்கவும்.
Answer:
- 13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும் இங்கிலாந்து அங்கீகரித்தது.
- மேற்கே மிசிசிபி ஆற்றை எல்லையாகவும் தெற்கே 31வது இணைகோட்டை எல்லையாகவும் கொண்ட பகுதிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமாயின.
- மேற்கத்திய தீவுகள், இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்திற்குச் சொந்தமாயிருந்த சில பகுதிகள் பிரான்ஸ் பெற்றது.
- ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.
- ஹாலந்தும் இங்கிலாந்தும் போருக்கு முன்பு நிலவிய நிலையை அப்படியே பேசின.
Question 2.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
Answer:
- அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை ஏற்படுத்தியது.
- மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
- அரசியல், சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
- குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்கஜக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
- கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
- கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
- அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
- ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
Question 3.
“1789ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது” விளக்குக.
Answer:
- 1789 புரட்சிக்கு மிக முன்னதாகவே கருத்துக்களத்தில் புரட்சி நடைபெற்று விட்டது.
- பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதற்காக சமூகத்தை தயார் செய்ததில் வால்டேர், ரூசோ ஆகியோரின் எழுத்துக்கள் புரட்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன.
- ‘சட்டங்களின் சாரம் எனும் தனது நூலில் மாண்டெஸ்கியூ அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை எதிர்த்தார்.
- அதிகாரங்கள் சட்டமியற்றுதல், சட்டங்களை செயல்படுத்துதல், நீதித்துறை என பிரிக்கப்பட வேண்டுமெனக் கூறினார்.
- வால்டேர் “பதினான்காம் லூயியின் காலம்” என்ற தனது நூலில் பிரெஞ்சுக்காரர்களின் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததோடு முடியாட்சி மன்னர்களின் கீழ் நடைபெற்ற பிரெஞ்சு நிர்வாகத்தையும் விமர்சித்தார்.
- ரூஸோ தான் எழுதிய சமூக ஒப்பந்தம்’ எனும் நூலில், ஆள்வோர்க்கும் ஆளப்படுவோருக்குமான உறவு ஓர் ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வாதிட்டார்.
- ஆங்கிலத் தத்துவ ஞானியான ஜான் லாக் “அரசாங்கத்தின் இரு ஆய்வுக்கட்டுரைகள்” எனும் நூலில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டையும் வரம்பற்ற முடியாட்சியையும் எதிர்த்தார்.
- தீதரோ என்பவரும் மற்றவர்களும் வெளியிட்ட கலைக் களஞ்சியத்தில் இது போன்ற கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன.
Question 4.
“செப்டம்பர் படுகொலைகள்” எதனால் ஏற்பட்டது?
Answer:
- முடியாட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் * எதிர்புரட்சியாளர் சதியில் இணையப் போவதாக மக்கள் நம்பினர்.
இதன் விளைவாக மக்கள் கூட்டம் சிறைச்சாலைகளைத் தாக்கின. - அரச குடும்ப ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1792 செப்டம்பர் 2இல் பாரிஸ் நகரில் அபே சிறையில் தொடங்கிய இப்படுகொலை நகரின் ஏனைய சிறைகளிலும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வந்த இது செப்டம்பர் படுகொலைகள் எனப்படுகிறது.
- இந்நிகழ்வில் மொத்தம் 1,200 கைதிகள் கொல்லப்பட்டனர்.
Question 5.
தென் அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
Answer:
- 1808இல் நெப்போலியன் படையெடுப்பின் போது போர்ச்சுக்கல் அரசர் டாம் ஜோவோ பிரேசிலுக்குத் தப்பினார்.
- ஆனால் அவரது அதிகாரத்திற்கு சவால்கள் தோன்றியது.
- எனவே பிரேசிலை தனது மகன் டாம் பெட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு செல்ல முடிவெடுத்தார்.
- 1822இல் பிரேசில் போர்ச்சுகளிடமிருந்து விடுதலைப் பெற்று அரசியல் அமைப்பு கொண்ட முடியரசானது.
Question 6.
தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனியில் நடந்தது என்ன?
Answer:
- ஜெர்மனியில் பிரஷ்யாவின் தலைமையில் செயல்பட்ட நாடுகள் செய்தொழில்களிலும், உற்பத்தியிலும் இங்கிலாந்தின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின.
- 1871இல் ஜெர்மனி இணைக்கப்பட்டது வேகமான தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது.
- மின்சாரத்தின் கண்டுபிடிப்பும், ருடால்ப் டீசலின் டீசல் என்ஜின் கண்டுபிடிப்பும் சேர்ந்து ஜெர்மனியை ஐரோப்பியாவில் மோட்டார் வாகன உற்பத்தியின் தலைமை வகிக்கும் நாடாக மாற்றியது.
- ஜெர்மனி இரும்பு எஃகுத் தொழிலிலும் தனது முத்திரையைப் பதித்தது.
- 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி, மிகப் பெருமளவில் தொழில்மயமான நாடாக உருவானது.
- தொழிற்புரட்சியின் தாயகமான இங்கிலாந்தை மிஞ்சி அமெரிக்காவின் போட்டியாளராகத் தன்னை நிலை நாட்டியது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள்:
- காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாகவே கருதிய இங்கிலாந்து, காலனி மக்களின் நலன்களைப் புறக்கணித்துத் தனது நலன்களுக்காகவே ஆட்சி செய்தது.
- 1764ல் சர்க்கரை மற்றும் சர்க்கரைபாகுவிற்கு வரி விதித்தது. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து காலனிகளையும் இவ்வரியைச் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டன.
- குடியேற்ற நாடுகள் “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியுமில்லை ” எனும் முழக்கத்தை எழுப்பியது.
- நாவாய்ச் சட்டங்கள் குடியேற்ற நாடுகளின் வணிகர்கள் தங்களது சுதந்திரத்தை பறிப்பதாக எண்ணினர்.
- 1765ன் முத்திரைச் சட்டம், அதன் பிறகு வந்த டவுன்ஷெண்ட் சட்டம் மற்றும் சில பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள் அமெரிக்க குடியேற்றங்களிடையே பெரும் வன்முறையை ஏற்படுத்தியது.
- இச்சட்டங்களை நீக்க வேண்டி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜூக்கு ஆலிவ் கிளை விண்ணப்ப மனு அளிக்கப்பட்டது. ஆனால் அது மன்னரால் நிராகரிக்கப்பட்டது.
போரின் போக்கு :
- 1776 ஜூலை 4இல் 13 குடியேற்ற நாடுகளும் விடுதலை பெறுவதாக அறிவித்தன. இதனால் போர் தவிர்க்க முடியாததாயிற்று.
- ஆங்கிலப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் தலைமை தாங்க அமெரிக்கப் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை ஏற்றார்.
- போரின் தொடக்கத்தில் வாஷிங்டனை புருக்ளின், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற இடங்களில் வில்லியம் ஹோவ் வெற்றி கண்டார்.
- ஆனால் வாஷிங்டன் தனது திட்டமிட்ட போர் தந்திரத்தால் 1777ல் சாரடோகா போர் முனையில் ஆங்கிலப்படைகள் சரணடைந்தன.
- 1781ல் யார்க்டவுன் என்ற இடத்திலும் இங்கிலாந்து படைகள் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தது. அமெரிக்க குடியேற்றங்கள் வெற்றி பெற்றன.
விளைவுகள் :
- வடக்கே இருந்த குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன. 1783ல் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும் இங்கிலாந்து அங்கீகரித்தது. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் அதிபரானார்.
Question 2.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின்
போக்கினை வரைக.
Answer:
- மூன்றாம் பிரிவுப் பிரதிநிதிகள் தேசிய சட்டமன்றத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாதாரண மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் துயரங்களுக்கு உள்ளாயினர்.
- உணர்ச்சிவயப்பட்ட பெண்கள் சந்தைப் பகுதியை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர். அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.
- இதனால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த மக்கள் பாரிஸ் நகரின் முக்கியச் சிறைக்கூடமான பாஸ்டில் சிறையை 1789 ஜூலை 14 இல் தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
- 1791 இல் தேசிய சட்டமன்றம் அரசியலமைப்பை உருவாக்கி அரசர் அதிகாரம் குறைக்கப்பட்டது.
- 25 வயது நிரம்பிய வரி செலுத்தும் ஆண்கள் வாக்குரிமை பெற்றனர்.
- ஆனால் மக்கள் துயரம் குறையவில்லை .
- எனவே தங்கள் குறைகளை நீக்க நடுத்தர மக்கள் ஜேக்கோபியன் குழுவை உருவாக்கினர்.
- எதிர் புரட்சியாளர் சதியில் அரசியல் கைதிகள் இணையப் போவதாக மக்கள் நம்பியதை தொடர்ந்து அரச ஆதரவாளர்கள் 1200 பேர் 1792 செப்டம்பர் 2ல் கொல்லப்பட்டனர். இது செப்டம்பர் படுகொலைகள் ஆகும்.
- அரசர் 16ல் லாயியும், அரசி அன்டாய்னட்டும் கூட 1793ல் கில்லடினில் கொல்லப்பட்டனர்.
- புரட்சி தொடங்கிய முதல் 4 ஆண்டுகளில் ஏற்பட்ட நன்மைகளை ரோபஸ்பியர் இழக்க விரும்பவில்லை.
- தன்னுடைய சர்வாதிகார ஆட்சியில் ஜெகோபியர்கள் கிராண்டியர் தலைவர்களை சிரச்சேதம் செய்தார்.
- 1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்த காலமாக இருந்தது.
- அரசும் சமூக அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியருக்கு எதிராக திரும்பியதால் அவரும் குற்றம் சாட்டப்பட்டு 1794ல் தூக்கிலிடப்பட்டார்.
Question 3.
“அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன. இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
Answer:
- கரீபியன் கடலில் சர்க்கரை வளம் மிகுந்த பிரஞ்சு காலனியாதிக்க நாடு ஹைட்டி மேற்கு ஹிஸ்பானியோலா பகுதி நிலவுடைமையாளர்கள் அதிக அளவில் ஆப்ரிக்க அடிமைகளை இறக்குமதி செய்தனர்.
- பிரான்சில் பாஸ்டில் சிறை தகர்ப்பு செய்தியை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக ஆயுத எதிர்ப்பு நடந்தது.
- முலாட்டோ பிரிவின் வின்சென்ட் ஒஜ் என்பவர் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் தூக்கிவிடப்பட்டார்.
- 1790ல் பிரான்ஸ் கருப்பின முலாட்டோகளுக்கு குடியுரிமை வழங்கியது.
- ஆனால் வெள்ளையர் மதிக்கவில்லை. எனவே மீண்டும் மோதல் வெடித்தது.
- 1790ல் படைத்தளபதி டூசைண்ட் எல் ஓவர்ச்சர் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
- இதை மீட்க 12000 படைவீரர்களை நெப்போலியன் அனுப்பி வைத்தார்.
- தளபதி டெசலைன்ஸ் கருப்பின மக்களை ஒருங்கிணைத்து நெப்போலியன் படைகளை தோற்கடித்தார். 1804ல் ஹைட்டி கருப்பின மக்களின் சுதந்திர நாடானது.
Question 4.
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
Answer:
பல்வேறு காரணங்களினால் தொழிற்புரட்சி முதன் முதலாக இங்கிலாந்தில் தொடங்கியது.
வணிகப்புரட்சியின் தாக்கம்:
- வியாபார, வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள், முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
- கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும், காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
- ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சக்திகளை அது தோற்கடித்தது.
- 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் நான்கில் ஒரு பகுதி இங்கிலாந்தின் காலனிகளாக இருந்தது.
- இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன. 1600இல் நான்கு மில்லியன்களாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை 1700இல் ஆறு மில்லியன்களாகவும் 18ம்
நூற்றாண்டின் முடிவில் ஒன்பது மில்லியன்களாகவும் பெருகியது. - பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
- அதனால் தொழிற்சாலைகளில் முதலீடு செய்யத் தேவையான மூலதனம் தாராளமாகக் கிடைத்தது.
- ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
- அதன் அரசியல் உறுதித்தன்மை தொழில்களின் வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது.
- நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் கிடைத்ததென்பது தொழிற்வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். 1800இல் இங்கிலாந்து 10 மில்லியன் டன் நிலக்கரியை அல்லது உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 90 விழுக்காட்டினை உற்பத்தி செய்தது.
- புதிய வேளாண்மைத் தொழில் நுட்பங்களுடன் பயிர்சுழற்சி முறையும் அறிமுகமானதால் வேளாண்
உற்பத்தி அதிகமானது. - ஆனால் இது விவசாயத் தொழிலாளர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
- அனைத்தும் இழந்து திவாலாகிப் போன விவசாயிகள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.
- 18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இவ்வாறு சென்றவர்களே பல்வேறு தொழிற்சாலைகளுக்குப்
பெருமளவிலான உழைப்பாற்றலை வழங்குவோராய் இருந்தனர். - தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
- அது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகத்தை எளிதாக்கியது.
- நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும், அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
- இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தியிழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. அமெரிக்க புரட்சி வெற்றி பெறாமல் போயிருந்தால் என்ன நடைபெற்றிருக்கக்கூடும் என்பது குறித்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம்.
2. பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளைப் போல் மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்து, பதினாறாம் லூயியால் மே, 1789இல் கூட்டப்பட்ட தேசிய சட்டசபை போன்ற மாதிரிச் சட்டசபையின் அமர்வை நடத்திப் பார்க்கலாம்.
3. இயந்திரங்களும் தொழிற்சாலை முறையும் அறிமுகமான சூழலில் இங்கிலாந்தில் கைவினைத் தொழில்கள் எவ்வாறு சீரழிந்தது என்பதை மாணவருக்கு உணர்த்தி, அதைப் போன்றதொரு சூழ்நிலை ஆங்கிலக்காலனியாட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்தியாவில் ஏற்பட்டதையும் எடுத்துரைக்கவும்.
12th History Guide புரட்சிகளின் காலம் Additional Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறியவர்கள் …………………..
அ) போர்ச்சுக்கீசியர்
ஆ) ஸ்பானியம்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) பிரெஞ்சுக்கள்
Answer:
இ) ஆங்கிலேயர்கள்
Question 2.
பிரெஞ்சுப் புரட்சியின் காலம் ………….
அ) 1775-83
ஆ) 1789-95
இ) 1756-63
ஈ) 1689-1755
Answer:
ஆ) 1789-95
Question 3.
நியூ ஆம்ஸ்ட ர்டாம் என்ற நகரை ஆங்கிலேயர் கைபற்றி அதற்கு ………….. என பெயர் மாற்றம் செய்தனர்.
அ) நியூயார்க்
ஆ) வாஷிங்டன்
இ) பாஸ்டன்
ஈ) கனடா
Answer:
அ) நியூயார்க்
Question 4.
அமெரிக்க புரட்சியின் காலம் ……………..
அ) 1775-83
ஆ) 1789-95
இ) 1756-63
ஈ) 1689-1755
Answer:
அ) 1775-83
Question 5.
அடிமைகள் விற்பதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்க இயலும் என உணர்ந்த முதல் ஆங்கிலேயர்
அ) முதலாம் ஜேம்ஸ்
ஆ) முதலாம் எலிசபெத்
இ) கியூபெக்
ஈ) ஜான் ஹாக்கின்ஸ்
Answer:
ஈ) ஜான் ஹாக்கின்ஸ்
Question 6.
ஏழாண்டுப் போர் நடைபெற்ற ஆண்டு ……………
அ) 1763-70
ஆ) 1765-1772
இ) 1756-63
ஈ) 1766-1773
Answer:
இ) 1756-63
Question 7.
கால வரிசைப்படுத்துக.
i) கியூபெக் சட்டம்
iii) பாஸ்டன் படுகொலை
ii) முத்திரைச் சட்டம்
iv) செப்டம்பர் படுகொலை
அ) i, iii, iv, iv
ஆ) iii, i, ii, iv
இ) ii, iii, i, iv
ஈ) iii, ii, i, iv
Answer:
ஆ) iii, i, ii, iv
Question 8.
கூற்று : 1770ல் இங்கிலாந்தின் புதிய பிரதமரான நார்த் பிரபு தேயிலை மீதான வரியைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை நீக்கினார்.
காரணம் : இங்கிலாந்து நாடுகள் பாராளுமன்றத்திற்கு குடியேற்ற நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி விதிக்கும் உரிமை உண்டு
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு. காரணம் சரி.
இ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
Answer:
இ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
Question 9.
“சட்டங்களின் சாரம்” என்னும் நூலை எழுதியவர் ………………
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) ஜான் லாக்
Answer:
இ) மாண்டெஸ்கியூ
Question 10.
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
கூற்று 1 : அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை மாண்டெஸ்கியூ எதிர்த்தார்
கூற்று 2 : 1773ல் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிசில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.
கூற்று 3 : போரைத் தொடர்வதால் பயனேதும் இல்லை என இங்கிலாந்து பாராளுமன்றம் 1783ல் முடிவு செய்தது.
கூற்று 4 : பிரான்சில் இப்போதும் ஜூலை 14ஐ பாஸ்டில் நாளாக அல்லது பிரெஞ்சு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அ) 1, 2, 3 சரி கா
ஆ) 2, 3, 4
இ) 1, 3, 4 சரி
ஈ) அனைத்தும் சரி –
Answer:
இ) 1, 3, 4 சரி
Question 11.
பொருத்துக
அ பீட்டர்லூ படுகொலை | 1 1887 மே 1 |
ஆ ஹேமார்கெட் படுகொலை | 2 1792 செப்டம்பர் 2 |
இ உலக உழைப்பாளர் தினம் | 3 1886 மே 4 |
ஈ செப்டம்பர் படுகொலைகள் | 4 1819 |
அ) 3 2 1 4
ஆ) 4 1 3 2
இ) 4 3 1 2
ஈ) 2 3 4 1
Answer:
இ) 4 3 1 2
Question 12.
எது ஒன்று சரியாகப் பொருத்தப்படவில்லை ?
அ) நியூ ஆம்ஸ்ட ர்டாம் – நியூயார்க்
ஆ) நீக்ரோக்கள் – இந்தியா
இ) வெர்ஜினியா – ரோவனோக் தீவு
ஈ) முத்திரைச் சட்டம் – 1765
Answer:
ஆ) நீக்ரோக்கள் – இந்தியா
Question 13.
ஏழாண்டுப் போர் நிறைவடைந்த ஆண்டு
அ) 1761
ஆ) 1762
இ) 1763
ஈ) 1764
Answer:
இ) 1763
Question 14.
“பிரதி நிதித்துவம் இல்லையேல் வரியில்லை” என்ற முழக்கம் எந்த நாட்டில் நடைபெற்ற புரட்சியின் போது எழுப்பப்பட்டது?
அ) பிரான்சு
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா
Answer:
இ) அமெரிக்கா
Question 15.
பொது அறிவு” என்னும் நூலின் ஆசிரியர்
அ) வால்டேர்
ஆ) பெஞ்சமின் பிராங்க்ளின்
இ) தாமஸ் பெய்ன்
ஈ) தாமஸ் ஜெபர்சன்
Answer:
இ) தாமஸ் பெய்ன்
Question 16.
அமெரிக்க விடுதலைப் போர் ……………. . உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது.
அ) லண்டன்
ஆ) ரோம்
இ) பாரீஸ்
ஈ) ஜெனிவா
Answer:
இ) பாரீஸ்
Question 17.
“சமூக ஒப்பந்தம்” என்ற நூலின் ஆசிரியர் ………….
அ) ரூசோ
ஆ) வால்டேர்
இ) மாண்டெஸ்கியூ
ஈ) இதில் எவரும் இல்லை
Answer:
அ) ரூசோ
Question 18.
16ஆம் லூயி மக்கள் தீர்ப்பாயத்தின் முன் கில்லட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்ட நாள் …………….
அ) 1792 செப்டம்பர் 20
ஆ) 1793 ஜனவரி 21
இ) 1791 ஜூன் 21
ஈ) 1793 மே 29
Answer:
ஆ) 1793 ஜனவரி 21
Question 19.
1889ல் பாரிஸ் நகர ஈபிள் கோபுரத்தின் உயரம் …….
அ) 274 மீ
ஆ) 324 மீ
இ) 374 மீ
ஈ) 224 மீ
Answer:
ஆ) 324 மீ
Question 20.
மின் தந்தி முறை முதன்முறையாக நடைமுறைக்கு வந்த ஆண்டு ………
அ) 1735
ஆ) 1755
இ) 1835
ஈ) 1855
Answer:
இ)1835
Question 21.
அமெரிக்க தொழிற்புரட்சியின் தந்தை” என ஆண்ட்ரு ஜேக்சனால் போற்றப்பட்டவர் …………..
அ) தாமஸ் ஆல்வா எடிசன்
ஆ) சாமுவேல் சிலேட்டர்
இ) G.T. நாயூடு
ஈ) ருடால்ப் டீசல்
Answer:
ஆ) சாமுவேல் சிலேட்டர்
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
ஐரோப்பியர்கள் குடியேற்றங்களுக்கு சென்றதற்கான காரணங்கள் யாவை?
Answer:
- நிலையற்ற ஐரோப்பிய வாழ்க்கைச் சுழலினால் சலிப்பு கொண்ட மக்கள் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே. குடியேற்றங்களுக்கு வந்தனர்.
- அவர்கள் மத சுதந்திரத்தை விரும்பினர். மேலும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்ற விரும்பினர்.
Question 2.
பாஸ்டன் படுகொலைப் பற்றி நீ அறிவது யாது?
Answer:
- 1770ல் இங்கிலாந்து பிரதமர் நார்த் பிரபு என்பவர் குடியேற்ற நாடுகளின் மீது தேயிலை தவிர மற்ற – பொருள்களின் மீதான வரிகளை நீக்கினார்.
- இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குடியேற்ற நாடுகளின் மீது வரி விதிக்கும் உரிமை பார்க்க து உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலை மீதான வரி நீக்கப்படவில்லை.
- இதனை எதிர்த்த அமெரிக்கர்கள் 1770 மார்ச் 5ல் பாஸ்டன் நகரில் போராட்டம் நடத்தினர்.
- பிரிட்டிஷ் வீரர்கள் 5 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றனர். 1 இதுவே பாஸ்டன் படுகொலை எனப்படுகிறது.
Question 3.
முத்திரைச் சட்டம் – குறிப்பு தருக.
Answer:
- 1765இல் முத்திரைகள் மீதான புதிய வரிச்சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
- இதன் மூலம் குடியேற்ற நாடுகளுடைய மக்கள் சட்டத் தொடர்புடைய அனைத்து ஆவணங்களிலும் வருவாய்முத்திரைகளை ஒட்டவும் முத்திரைகளை பயன்படுத்தவரிசெலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- குடியேற்ற நாட்டு மக்கள் அவற்றை வாங்க மறுக்கவே ஆங்கில வணிகர்கள் குடியேற்ற நாட்டு அரசுகளை அச்சட்டத்தை விலக்கிக் கொள்ள வற்புறுத்தின. பட்டம்.
Question 4.
பிலடெல்பியா மாநாடு பற்றி கூறுக.
Answer:
- 1774இல் இயற்றப்பட்ட பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற நாடுகள், பிலடெல்பியாவில் முதன்முதலில் பொது மாநாட்டினைக் கூட்டின.
- ஜார்ஜியா நீங்கலாக மாநாட்டில் கலந்து கொண்ட ஏனைய குடியேற்றங்களின் பிரதிநிதிகள் பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
- அதுவரையிலும் ஆங்கிலேயப் பொருட்களைப் புறக்கணிப்பது என்றும் மாநாடு முடிவு செய்தது.
Question 5.
தொழிற்புரட்சி என்றால் என்ன?
Answer:
- தொழில் புரட்சி என்பது பெருமளவிலான பொருட்களை மிகப்பெரும் ஆலைகளில் உற்பத்தி செய்யும் முறையை பின்பற்றுதலைக் குறிக்கிறது.
- இது கைவினைஞர்களின் குடிசைத் தொழில் கூடங்களிலோ அல்லது பட்டறைகளிலோ பொருட்களை தயாரிப்பது எனும் பழைய முறைக்கு எதிரானது.
Question 6.
தந்தி முறை – குறிப்பு தருக.
Answer:
- பாரடே, வோல்டா, ஆம்பியர் மற்றும் பிராங்ளின் ஆகியோரது அடிப்படையான ஆய்வுகளின் காரணமாகவே மின்னணு தந்திமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1835இல் முதல் மின் தந்திமுறை நடைமுறைக்கு வந்தது. 16 ஆண்டுகளுக்குப்பின்னர் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே கடலடித் தந்தி வடம் அமைக்கப்பட்டது.
- சில ஆண்டுகளில் தந்தி முறை உலகம் முழுவதும் பரவியது.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
ரோவனோக் தீவு – இழக்கப்பட்ட குடியேற்றம் ஏன்?
Answer:
- 1587இல் சர் வால்டர் ராலே என்பவர் வட கரோலினாவிற்கு அருகே இருந்த ரோவனோக் தீவில் ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி, கன்னிமை அரசியான ராணியார் முதலாம் எலிசபெத்தின் நினைவாக வெர்ஜினியா எனப் பெயரிட்டார்.
- ஆனால் பூர்வகுடி இந்தியர்களின் வலுவான எதிர்ப்பால் தொடக்கத்தில் குடியேறிய பலர் இங்கிலாந்து திரும்பினர்.
- சில ஆண்டுகள் கழித்து ஆங்கிலேய மாலுமிகள் அங்கு சென்ற போது குடியேற்றம் இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லை. எனவே ரோவனோக் தீவு இழக்கப்பட்ட குடியேற்றமானது.
Question 2.
பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்கள் பற்றி விளக்குக.
Answer:
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வால் சினம் கொண்ட இங்கிலாந்துப் பாராளுமன்றம் பாஸ்டன் துறைமுக மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி
கடலில் வீசப்பட்ட தேயிலைக்கான ஈட்டுத்தொகை காலனி மக்களால் வழங்கப்படும் வரை பாஸ்டன் துறைமுகம் மூடி இருக்கும்.
மாசாசூசெட்ஸ் அரசுச் சட்டத்தை இங்கிலாந்துப் பராளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி மாசாசூசெட்ஸின் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கலைக்கப்படவும், ஆளுநரின் அதிகாரம் அதிகரிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.
நிதி நிர்வாகச் சட்டம் இயற்றப்பட்டு கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் எனக் கருதப்படுபவர்களை வேறு காலனிகளிலோ அல்லது இங்கிலாந்திலோ வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட படைவீரர்கள் தங்குமிடச் சட்டத்தின் மறுபதிப்பு பொறுத்துகொள்ளமுடீயாதசட்டம். இச்சட்டம் காலியாகவுள்ளகட்டடங்களில் ஆங்கிலப்படைகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது. அடக்குமுறைச் சட்டங்கள் என அறியப்பட்ட இப்பொறுக்க முடியாத சட்டங்கள் காலனிகளிடையே பெரும் வன்முறை அலைகளை (1774) ஏற்படுத்தியது.
Question 3.
கியூ பெக் சட்டம் பற்றி கூறுக.
Answer:
- 1774இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட கியூபெக் சட்டத்தின்படி, ஓஹியோ மற்றும் மிசிசிபி ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி கியூபெக்கிற்கு வழங்கப்பட்டது.
- இதனால் நியூயார்க், பென்சில்வேனியா, வெர்ஜினியா ஆகிய அரசுகள் கோபம் கொண்டன.
- ஏனெனில் இதே நிலப்பகுதி இக்காலனி அரசுகளுக்கு அரச பட்டயத்தின் மூலம் முன்னர் வழங்கப்பட்ட பகுதிகளாகும்.
- மேலும் இப்புதிய பகுதியில் பிரெஞ்சுக் குடிமைச் சட்டங்களும், ரோமன் கத்தோலிக்க மதமும் செயல்பட இங்கிலாந்து அனுமதித்ததன் மூலம் பிராட்டஸ்டன்ட் காலனிகளையும் கோபம் கொள்ளச் செய்தது.
Question 4.
சமூக ஒப்பந்தம் – குறிப்பு தருக.
Answer:
- ரூஸோவால் எழுதப்பட்டது “சமூக ஒப்பந்தம்” என்ற நூல்.
- இதில் “மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் அனைத்து இடங்களிலும் சங்கிலிகளில் பிணைக்கப் படுகிறான்” என்னும் புகழ் பெற்ற தொடக்க வரிகளைக் கொண்டுள்ளது. இவ்வரிகளுக்காகவே ரூஸோ பெரிதும் போற்றப்படுகிறார்.
Question 5.
டென்னிஸ் மைதான உறுதி மொழி பற்றி கூறுக.
Answer:
- சமூகத்தின் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் 1789 ஜூன் 17இல் தேசிய சட்டமன்றத்தைக் கூட்டினர்.
- பின்னர் அவர்கள் முப்பேராயத்தை விட்டு வெளியேறி 1789 ஜூன் 20இல் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
- அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
- அதுவரை கலைந்து செல்லப் போவதில்லை என உறுதிமொழி எடுத்தனர். “இதுவே டென்னிஸ் மைதான உறுதிமொழி” ஆகும்.
- இவ்வெதிர்ப்பில் அவர்களுக்கு மிராபு எனும் பிரபுவும் அபேசியஸ் எனும் மதகுருவும் தலைமை தாங்கினர்.
Question 6.
மனித குடிமக்கள் உரிமை பிரகடனம் பற்றி விளக்குக.
Answer:
- மனித, குடிமக்கள் உரிமைப் பிரகடனம், ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
- முதல் பிரிவு “மனிதர்கள் பிறக்கும் போது சுதந்திரத்துடனும் உரிமைகளில் சமமானவர்களாகவும் உள்ளனர்” என்ற வாசகத்தைக் கொண்டுள்ளது.
- சுதந்திரம், சொத்துக்களுக்கான பாதுகாப்பு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என விவரிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதே “அரசியல் ரீதியாக ஒன்றுபடுவதின்” நோக்கமாக இருக்க வேண்டும் என இப்பிரகடனம் கூறுகிறது.
- இறையாண்மையும் சட்டமும் “பொது விருப்பம்” என்பதிலிருந்து உருவாக வேண்டும்.
- பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் பாதுகாத்து சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகிறது.
- வருவாய்க்கு ஏற்ப அனைவரும் வரி செலுத்த வேண்டும் எனவும் உறுதிபடக் கூறுகிறது.
- 1791இல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பிற்கு இப்பிரகடனம் ஒரு முகவுரையாக அமைந்தது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
பிரெஞ்சுப் புரட்சியினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.
Answer:
- பிரெஞ்சுப் புரட்சி பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
- பிரெஞ்சுப் புரட்சி பிரான்சில் பதினாறாம் லூயியின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.
- சமூக சமத்துவமின்மையைக் குறைத்தது. பிறப்பின் அடிப்படையில் சமூகத்தின் சில பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.
- இப்புரட்சி தேர்தல் உரிமைகளுடன் குடியரசு தன்மையிலான அரசு முறையை அறிமுகம் செய்தது.
- நிலமானிய முறை ஒழிக்கப்பட்டது.
- அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும் பிரெஞ்சுப் புரட்சி அடிமை முறையை ஒழித்தது.
- திருச்சபை தனது உயர்நிலையை இழந்தது. அது அரசுக்குக் கீழ் எனும் நிலையை அடைந்தது. மதச்சுதந்திரம், மத சகிப்புத்தன்மையும் நிலை பெற்றன.
- மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைப் பிரகடனம் தனிப்பட்ட , கூட்டு உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
- அரசின் மூன்று உறுப்புகளான சட்டமியற்றல், நடைமுறைப்படுத்தல், நீதித்துறை ஆகியன முக்கியத்துவம் பெற்றன. ஒன்றையொன்று கண்காணித்துச் சமநிலைப்படுத்திக் கொண்டன. இந்த ஏற்பாடு ஒரு குறிப்பிட்ட மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதைத் தடை செய்தது.
- ஐரோப்பா முழுவதிலும், கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து சமத்துவ சமூகத்தை நிறுவ முடியும் எனும் நம்பிக்கையைப் பிரெஞ்சுப் புரட்சி மக்களுக்கு வழங்கியது.
Question 2.
தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
Answer:
- தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது. ஆலைகள் இயந்திரமயமானதின் விளைவாக உற்பத்தி மிகப்பெருமளவிற்குப் பெருகியது.
- ஆனால் அவ்வாறு பெருகிய செல்வம் புதிய தொழிற்சாலைகளின் முதலாளிகளாய் இருந்த சிறு குழுவுக்கே சென்றது.
- தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத்தீர்த்து வைத்தது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட செல்வத்தை விநியோகிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை அதனால் தீர்க்க இயலவில்லை.
- இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருளுற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.
- ஆயிரக்கணக்கான கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலை அற்றவர்களாயினர்.
- தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமான போது பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டது.
- ஆலைத்தொழிலாளர் என்ற புதியவர்க்கம் அவ்வளவு எளிதாகத் துன்பங்களை, ஏற்றுக்கொள்ளவில்லை. இயந்திரங்களை உடைப்பது, பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது, தொழிலாளர்
சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Question 3.
தொழிற்புரட்சி காலத்திய முக்கிய கண்டுபிடிப்புகளை விவரி.
Answer:
தொழிற்சாலை அமைப்பு:
- தொழிற்புரட்சிக்கு முன்னர் பொருள்களின் உற்பத்தியானது தொழிற்கூடங்களிலோ அல்லது தொழிலாளர்களின் குடிசைகளிலோ நடைபெற்றது.
- புதிய கண்டுபிடிப்புகளின் வருகைக்குப் பின்னர் இப்பணிகளை இயந்திரங்கள் செய்தன. தொழிற்சாலைகள்
பெருமளவிலான பொருட்களை உற்பத்தி செய்யுமிடமாயிற்று.
பருத்தித் தொழிற்சாலைகள் :
- பருத்தித் தொழிலில் தான் முதன்முதலாக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.
- பறக்கும் நாடா 1733இல் ஜான் கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1764இல் ஸ்பின்னிங் ஜென்னி எனும் நூற்பு இயந்திரம் ஜேம்ஸ் ஹார்கிரீவஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- ரிச்சர்டு ஆர்க்ரைட் என்பவரால் 1769இல் உருவாக்கப்பட்ட நீர்ச்சட்டகம் என்ற இயந்திரத்தால் ஒரே சமயத்தில் 128 நூல்களை நூற்க முடிந்தது. சாமுவெல் கிராம்டன் மியூல் எனும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
இரும்புத் தொழிற்சாலைகள் :
- ஆபிரகாம் டெர்பி எனும் டெர்பிஷயரைச் சேர்ந்த நிலக்கரிச் சுரங்க உரிமையாளர் இரும்புத்தாதுவை உருவாக்குவதற்கு நிலக்கரியைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார்.
- 1712இல் முதன் முதலாக தாமஸ் நியூகோமென் என்பவர் நிலக்கரிச் சுரங்களிலிருந்து நீர் வெளியேற்றும் இயந்திரத்தை கண்டறிந்தார். ஜேம்ஸ் வாட் இதனை மேம்படுத்தினார்.
நீராவி இயந்திரங்கள் :
- 1804இல் முதல் ரயில் என்ஜின் உருவாக்கப்பட்டது. 1830இல் லிவர்பூல் – மான்செஸ்டர் இருப்புப்பாதை திறக்கப்பட்டது.
- 1807இல் ராபர்ட் புல்டன் எனும் அமெரிக்கர் வெற்றிகரமாக நீராவிப் படகினை உருவாக்கினார்.
சாலைகள்:
ஜான் லவுடன் மெக்காடம் என்பவர் உறுதியான தார் சாலையைக் கண்டறிந்தார்.
தந்தி முறை:
- 1835இல் முதல் மின் தந்தி முறை நடைமுறைக்கு வந்தது. 16 ஆண்டுகளுக்குப் பின் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடலடித் தந்தி வடம் அமைக்கப்பட்டது.
- இவை யாவும் தொழிற்புரட்சியை முன்னிட்டு கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும்.
How to Prepare using Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 12th History All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 12th History Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes
- Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Notes
- Samacheer Kalvi 12th History Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Notes
- Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Notes
0 comments:
Post a Comment